Monday, December 08 2025 | 04:47:18 PM
Breaking News

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் நூற்றாண்டு விழா சின்னத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு வெளியிட்டார்

Connect us on:

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் நூற்றாண்டு விழா சின்னத்தை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு வெளியிட்டார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் தனது 100-வது சேவையை கொண்டாடுவது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

இந்த நிகழ்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு வும்லுன்மங் வுல்னாம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவரும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரியுமான திரு விபின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் பேசிய திரு ராம்மோகன் நாயுடு, “இது நம் அனைவருக்கும் பெருமையான தருணம், இங்கு நாம் நம் தேசத்தால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தைத் தொடர்கிறோம், எதிர்கால சாதனைகளுக்கு அதிலிருந்து உத்வேகம் பெறுகிறோம். இந்த விமான நிலையம் கோடிக்கணக்கான பயணிகளுக்கு சேவை செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வரலாற்று மைல்கற்கள் மூலம் வங்காளத்திற்கும் நாட்டிற்கும் ஒரு முக்கிய நுழைவாயிலாக நின்றுள்ளது. நமது மாண்புமிகு பிரதமர் எப்போதும் ‘வளர்ச்சியும் பாரம்பரியமும்’ என்று மிகவும் அன்புடன் கூறுவார். எனவே இது எங்களுக்கு பெருமையான தருணம்” என்றார்.

நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொல்கத்தா விமான நிலையத்தின் 100 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து.நினைவு முத்திரை மற்றும் நாணயம் வெளியிடுதல், நவீன விமான நிலைய கட்டிடக்கலையில் பிரதிபலிக்கும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை புத்தகம் வெளியீடு, கொல்கத்தா மற்றும் வங்காள மக்கள் சம்பந்தப்பட்ட மூன்று மாத கால கொண்டாட்டங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான முயற்சிகளை அமைச்சர் அறிவித்தார்.

உடான் திட்டத்தின் கீழ் பயணிக்கும் பயணிகளுக்கு குறிப்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு தனித்துவமான உடான் யாத்ரி கஃபே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கஃபே மலிவு விலையுடன் ஒரு தொகுக்கப்பட்ட மெனுவை வழங்கும், பயணிகளுக்கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும். மதிப்பில் சமரசம் செய்யாமல் அவர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.