Tuesday, February 17 2026 | 04:18:13 AM
Breaking News

Miscellaneous

டிஎன்டி சமூகங்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த கூட்டம் – மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் தலைமை வகித்தார்

சீர்மரபு பிரிவினர், நாடோடி சமூகங்கள், பகுதி நாடோடி சமூகங்களின் (DNT – டிஎன்டி) நலன், மேம்பாடு குறித்து கவனம் செலுத்தும் முக்கிய  கூட்டம் மத்திய சமூக நீதி – அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் புதுதில்லியில் இன்று (02.01.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, சமூக நீதி – அதிகாரமளித்தல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். டிஎன்டி …

Read More »

மெலடோனின் ஹார்மோனின் நானோ-உருவாக்கம் பார்கின்சன் நோய்க்கு சிகிச்சைத் தீர்வாக அமையக் கூடும்

இருளுக்கான எதிர்வினையாக மூளை உற்பத்தி செய்யும் இருண்ட ஹார்மோன் என்று அழைக்கப்படும் மெலடோனின் ஹார்மோனின் நானோ-உருவாக்கம் மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற, நரம்பு பாதுகாப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பார்கின்சன் நோய்க்கு (பிடி) சாத்தியமான சிகிச்சை தீர்வாக இருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். பார்கின்சன் நோய் (பிடி) என்பது மூளையில் டோபமைன் சுரக்கும் நியூரான்கள் இறப்பதால் ஏற்படும் பொதுவான நரம்பியல் கோளாறுகளில் ஒன்றாகும். மெலடோனின் ஹார்மோன்  பார்கின்சன் நோய்க்கான எதிர் …

Read More »

மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் ஒரே நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ், தனது மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஒய்.எஸ்.ஆர் கடப்பாவில்  முற்பகல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கான உத்திகளை வழிநடத்துவதற்கும் அந்தந்த மாவட்டங்களில்  குறிப்பிடத்தக்க நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கேற்ப  இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.2018-ல் தொடங்கப்பட்ட முன்னேற …

Read More »

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் மேம்பட்ட தொலைத் தொடர்பு வசதிகள் – தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது மத்திய தொலைத் தொடர்புத் துறை

மகா கும்பமேளா 2025 நெருங்கி வருவதால், தொலைத் தொடர்புத் துறை கோடிக் கணக்கான பக்தர்கள், பார்வையாளர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதியை உறுதி செய்வதற்காக அதாவது டிஜிட்டல் மகா கும்ப மேளா 2025 என்ற நிலையை உருவாக்க குறிப்பிடத்தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அவற்றில் சில: *பிரயாக்ராஜ் நகரம், மேளா நடக்கும் பகுதி, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள முக்கிய பொது இடங்கள் முழுவதும் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை இத்துறை மேம்படுத்தியுள்ளது.  மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் …

Read More »

ஸ்ரீ மன்னத்து பத்மநாபன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்

ஸ்ரீ மன்னத்து பத்மநாபன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரை நினைவு கூர்ந்தார். சமுதாயத்தை மேம்படுத்தவும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கவும், மனித சமுதாயத்தின் துயரங்களைக் களையவும் அயராது பாடுபட்ட உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்டவர் அவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: “ஸ்ரீ மன்னத்து பத்மநாபனின் பிறந்த தினத்தையொட்டி அவரை நினைவு கூர்கிறேன். …

Read More »

2025 ஜனவரி 16 அன்று லோக்பால் தின கொண்டாட்டம்

14.03.2024 அன்று நடைபெற்ற இந்திய லோக்பால் கூட்டத்தில், 16.01.2014 அன்று பிரிவு 1 (4) இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் இந்தியாவின் லோக்பால் என்ற அமைப்பு நிறுவப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 அன்று ‘லோக்பால் தினம்’ கடைப்பிடிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி லோக்பால் தினத்தின் முதல் நிகழ்வு 2025 ஜனவரி 16 அன்று, தில்லி கண்டோன்மென்ட் மானெக்ஷா மையத்தில் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சஞ்சீவ் கன்னா இதில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார். இந்திய லோக்பால் அமைப்பின் இரண்டாவது தலைவராக …

Read More »

‘ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்: த்ரூ தி ஏஜஸ்’ என்ற புத்தகத்தை திரு அமித் ஷா புதுதில்லியில் நாளை வெளியிடுகிறார்

நாளை(ஜனவரி 2, 2025) புதுதில்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்குவார். மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கௌரவ விருந்தினராக கலந்து கொள்வார். இந்த நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள் ‘ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்: த்ரூ தி ஏஜஸ்’ (காலந்தோறும் -ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்) என்ற தலைப்பிலான …

Read More »

நீலகிரி, சூரத், வாக்ஷீர் ஆகிய 3 கப்பல்களை இயக்க இந்திய கடற்படை தயாராகி வருகிறது

2025 ஜனவரி 15  இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக அமைய உள்ளது.  திட்டம் 17 ஏ-வின்  கண்டறிய முடியாமல் ரகசியமாக பயணிக்கும் பக்கத் துணை போர்க்கப்பலான நீல்கிரி, திட்டம் 15 பி-யின்  கண்டறிய முடியாமல் ரகசியமாக பயணிக்கும் தாக்கி அழிக்கும் பிரிவின் நான்காவது மற்றும் இறுதி கப்பலான சூரத் மற்றும் ஸ்கார்பீன் பிரிவு திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீர்  ஆகிய மூன்று முன்னணி கப்பல்கள் …

Read More »

ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்

ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக இன்று அதாவது 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 01-ம் தேதி  பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா 1986-ம் ஆண்டு டிசம்பர் 06 – தேதி இந்திய விமானப்படையின் விமானியாக நியமிக்கப்பட்டார்.  அவர் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, பெங்களூரில் உள்ள விமானப்படை விமானிப் பயிற்சி பள்ளி, அமெரிக்காவின் விமானப்படை பணியாளர் கல்லூரி, இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் ஆகியவற்றின் முன்னாள் மாணவர் …

Read More »

அயனிகளின் இருப்பில் லைசோசைம் இரட்டை அடுக்குகளை உருவாக்குவது உட்செருகப்பட்ட உள்ளுறுப்புகளில் உயிரிப் புரத கிரகிப்பைப் பிரதிபலிக்கும்

உயிரினங்களில் உண்மையான புரத உறிஞ்சுதலைப் பின்பற்றுவதற்காக அறை வெப்பநிலை கரைசலில் இருந்து ஹைட்ரோஃபிலிக் மற்றும் ஹைட்ரோபோபிக் சிலிக்கான் மேற்பரப்பில் லைசோசைம் புரத மூலக்கூறுகளின் இரட்டை அடுக்குகளை ஓர் ஆராய்ச்சி குழு  நிலைப்படுத்தியது. இது உட்செருகப்பட்ட உள்ளுறுப்புகள் மற்றும் உயிரிப் பொருட்களில் அயனி-சமன்பாடு புரத உறிஞ்சுதல்களின் உண்மையான உயிரியல் செயல்முறைகளைப் பிரதிபலிக்க உதவும். லைசோசைம் என்பது ஒரு வகை புரதமாகும், இது நான்கு டைசல் பைடு பிணைப்புகளைக் கொண்டுள்ளது. மனிதக் கண்ணீர், வியர்வை, பால் மற்றும் …

Read More »