வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா 2025 ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள நிலையில், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். முன் முயற்சிகள் குறித்து தமது திருப்தியை வெளிப்படுத்திய அமைச்சர், இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் அனுபவத்தை வளப்படுத்துவதில் குழுவினரின் உறுதிப்பாட்டை பாராட்டினார். …
Read More »குடியரசுத் தலைவரின் அழைப்பிதழ்களை வழங்குவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் பங்களிப்பு
தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2025 குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘Republic Day at Home-2025’ எனும் பெருமை மிகு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பட்டுவாடா செய்யும் பணியில், அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஜனவரி 26,2025 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த அழைப்பிதழ்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆயுஷ் மருத்துவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்தி பாதுகாப்பு வாகையர்கள், அரசுத் திட்டத்தின் பயனாளர்கள் மற்றும் தத்தமது களங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, துல்லியமாக உரிய நபரிடம் அவற்றை பட்டுவாடா செய்ய தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உறுதிபூண்டுள்ளது. பெருமைமிகு இப்பணியை செய்ய, அர்ப்பணிப்புமிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யும். அர்ப்பணிப்போடு கூடிய சேவை புரிந்த இச்சாதனையாளர்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளின் செயலை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களுக்கு நாட்டின் நன்றியைக் கோடிட்டுக் காட்டும் விதமாகவும், அவர்கள் இந்த பெருமை மிகு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ஒவ்வொரு அழைப்பிதழையும் கையாள்வதில் பெருமிதம் கொள்வது மட்டுமின்றி இவ்வழைப்பிதழ்களை வழங்கிய அலுவலகமும், பெறுநர்களும் முழு திருப்தி அடைவதை உறுதி செய்வதும் நோக்கமாகக் …
Read More »மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் இன்று நடத்தியது
மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் தேசிய சோதனை அமைப்புடன் இணைந்து சென்னையில் இன்று நடத்தியது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் பிராந்திய ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்தது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தேசிய சோதனை அமைப்பின் இயக்குநர் திரு எம் சுரேஷ் பாபு மற்றும் இந்த அமைப்பின் தென் மண்டல குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொழில்நுட்ப அமர்வில் விஞ்ஞானி கே. ஜெயராஜ், டிரான்ஸ்ஃபார்மர்களின் சோதனை பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கினார். ஐஎஸ் 1180 (பகுதி 1)-ன் படி டிரான்ஸ்ஃபார்மர்களில் …
Read More »ஜம்மு-காஷ்மீருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் போக்குவரத்து இணைப்பு, ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு
பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தைக் காணொலி மூலம் தொடங்கி வைத்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் ரெயில்வேயில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்த முக்கிய நிகழ்வில், அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தப் பகுதியில் …
Read More »கர்நாடகாவில் இரண்டு பேருக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது
கர்நாடகாவில் இரண்டு பேர் ஹியூமன் மெட்டாநியூமோ வைரசால் (எச்.எம்.பி.வி) பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (ஐ.சி.எம்.ஆர்) கண்டறிந்துள்ளது. நாடு முழுவதும் சுவாச பாதிப்பு நோய்களைக் கண்காணிப்பதற்கான ஐ.சி.எம்.ஆரின் தற்போதைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளுக்காக மேற்கொள்ளப்படும் வழக்கமான கண்காணிப்பு மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். எச்.எம்.பி.வி பாதிப்பு ஏற்கனவே இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ளதாகவும், எச்.எம்.பி.வி உடன் தொடர்புடைய சுவாச …
Read More »மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், சிக்கிமில் நாட்டின் முதலாவது இயற்கை மீன் வளர்ப்பு இடத்தொகுப்பை தொடங்கி வைத்தார்
அசாம் மாநிலம் குவஹாத்தியில் மத்திய மீன்வளத் துறையின் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்கள் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய ரூ.50 கோடி மதிப்பிலான 50 முக்கிய திட்டங்களை அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற வடகிழக்கு …
Read More »ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் பிரதமர் பயணம்
ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்க ளில் 2025 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். நீடித்த வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், ஜனவரி 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். ஜனவரி 9 அன்று காலை …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
ரூ 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களின் முக்கிய கவனம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதும் பயணத்தை எளிதாக்குவதும் ஆகும். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலிலும் பிரதமர் பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று தில்லி-என்சிஆர் இந்திய அரசிடமிருந்து குறிப்பிடத்தக்க பரிசைப் பெற்றுள்ளது என்றும், இந்தியாவின் நகர்ப்புற இயக்கம் மேலும் விரிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நமோ பாரத் ரயிலில் சாஹிபாபாத்தில் இருந்து நியூ அசோக் நகர் வரை பகலில் பயணம் செய்ததை நினைவு கூர்ந்த திரு மோடி, வளர்ச்சியடைந்த இந்திய நகரங்களில் பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் பல இளைஞர்களுடன் உரையாடியதாக கூறினார். நமோ பாரத் திட்டம் நிறைவேறியதும், தில்லி-மீரட் பாதையில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தில்லி-என்சிஆர் மக்களுக்கு அவர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பு பயணத்தில் இன்று மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு தற்போது 1,000 கிலோமீட்டர்களை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டினார். 2014-ம் ஆண்டில், நாடு தங்களுக்கு வாய்ப்பு வழங்கியபோது, மெட்ரோ இணைப்பின் அடிப்படையில் இந்தியா உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் கூட இல்லை என்றும், கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா மெட்ரோ கட்டமைப்பில், உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய தனது அரசின் ஆட்சிக் காலத்தில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்று பிரதமர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு 248 கிலோமீட்டர்கள் மட்டுமே என்றும், அது வெறும் ஐந்து நகரங்களில் மட்டுமே இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் 752 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய மெட்ரோ பாதைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். இன்று, நாடு முழுவதும் 21 நகரங்களில் மெட்ரோ சேவைகள் செயல்படுகின்றன, தற்போது 1,000 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடங்கள் விரைவான வளர்ச்சியில் உள்ளன. தில்லி மெட்ரோ விரிவாக்கம், இரண்டு புதிய வழித்தடங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டல் ஆகியவற்றைக் குறிப்பிட்ட திரு மோடி, குர்கானுக்குப் பிறகு, ஹரியானாவின் மற்றொரு பகுதி தற்போது மெட்ரோ கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார். ரிதாலா-நரேலா-குண்ட்லி வழித்தடம் தில்லி மெட்ரோ கட்டமைப்பின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றாக இருக்கும், தில்லி மற்றும் ஹரியானாவில் உள்ள முக்கிய தொழில்துறை மையங்களுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கு பயணத்தை இது எளிதாக்குகிறது. மத்திய அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, தில்லியில் மெட்ரோ வழித்தடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 2014-ல் தில்லி-என்சிஆர் பகுதியில் மொத்த மெட்ரோ கட்டமைப்பு 200 கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்தது என்றும், இன்று அது இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். “கடந்த பத்தாண்டுகளாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு முதன்மையான கவனம் செலுத்தி வருகிறது” என்று திரு மோடி கூறினார். பத்தாண்டுகளுக்கு முன்பு, உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் சுமார் ரூ 2 லட்சம் கோடியாக இருந்தது, அது இப்போது ரூ 11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நவீன இணைப்புக்கு, குறிப்பாக நகரங்களுக்குள் மற்றும் ஒரு நகரத்தை மற்றொரு நகரத்துடன் இணைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தில்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விரைவுச் சாலைகள் உருவாகி வருவதாகவும், தில்லி தொழில் வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய தலைநகரப் பகுதியில் பெரிய பன்னோக்கு சரக்கு போக்குவரத்து மையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் இரண்டு சரக்கு வழித்தடங்கள் குவிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும் திரு மோடி எடுத்துரைத்தார். “ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் உட்பட அனைவருக்கும் கண்ணியமான மற்றும் தரமான வாழ்க்கையை உறுதி செய்ய நவீன உள்கட்டமைப்பு உதவுகிறது” என்று அவர் மேலும் கூறினார். பரம ஏழைகளுக்கும் மருத்துவ வசதி சென்றடைய வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், ஆயுஷ், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளையும் அரசு ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் ஆயுஷ் முறை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். பாரம்பரிய மருத்துவம் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் முதலாவது நிறுவனம் இந்தியாவில் நிறுவப்பட்டிருப்பதை திரு மோடி எடுத்துரைத்தார். சில வாரங்களுக்கு முன்பு, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் இரண்டாம் கட்டத்தை தாம் தொடங்கி வைத்ததாகவும் அவர் கூறினார். இன்று, மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகக் குறிப்பிட்ட திரு மோடி, இந்த சாதனைக்காக தில்லி மக்களுக்கு தனது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “உலகின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தலைநகராக மாறுவதற்கு இந்தியாவுக்கு மகத்தான ஆற்றல் உள்ளது” என்று பிரதமர் கூறினார். “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்பதுடன், “இந்தியாவில் குணப்படுத்துவோம்” என்பதை மந்திரமாக உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு மக்கள் இந்தியாவில் ஆயுஷ் சிகிச்சைகளைப் பெறுவதற்கு வசதியாக சிறப்பு ஆயுஷ் விசா வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் இந்த வசதியின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் இந்த முயற்சிகள் தில்லியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வினய் குமார் சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி. அதிஷி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னணி பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையேயான சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோமீட்டர் நீளமுள்ள தில்லி-காஸியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்த தொடக்க விழாவின் மூலம், தில்லி தனது முதல் நமோ பாரத் இணைப்பைப் பெறுகிறது. இது தில்லி மற்றும் மீரட் இடையேயான பயணத்தை கணிசமாக எளிதாக்கும், மேலும் இணையற்ற பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் அதிவேக மற்றும் வசதியான பயணம் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும். தில்லி மெட்ரோவின் ஜனக்புரி முதல் கிருஷ்ணா பூங்கா வரையிலான நான்காம் கட்டம் வரையிலான 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதி இதுவாகும். மேற்கு தில்லியின் கிருஷ்ணா பூங்கா, விகாஸ்புரியின் சில பகுதிகள், ஜனக்புரி போன்ற பகுதிகள் பயனடையும். தில்லி மெட்ரோ நான்காம் கட்டத்தின் 26.5 கிலோமீட்டர் தொலைவுக்கான ரிதாலா – குண்ட்லி பிரிவுக்கு ரூ.6,230 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த வழித்தடம் தில்லியில் உள்ள ரிதாலாவை ஹரியானாவில் உள்ள நாதுப்பூருடன் (குண்ட்லி) இணைக்கும், டெல்லி மற்றும் ஹரியானாவின் வடமேற்கு பகுதிகளில் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். பயனடைய வேண்டிய முக்கிய பகுதிகள் ரோஹினி, பவானா, நரேலா மற்றும் குண்ட்லி ஆகியவை அடங்கும், குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் இதன் முக்கிய நோக்கமாகும். இது செயல்பாட்டுக்கு வந்தவுடன், நீட்டிக்கப்பட்ட சிவப்பு கோடு வழியாக தில்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பயணிக்க உதவும். புதுதில்லி ரோகிணியில் சுமார் 185 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த வளாகம் அதிநவீன சுகாதார மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை வழங்கும். புதிய கட்டிடத்தில் நிர்வாகத் தொகுதி, வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு மற்றும் ஒரு பிரத்யேக சிகிச்சை பிரிவு ஆகியவை இருக்கும். இது நோயாளிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற சுகாதார அனுபவத்தை உறுதி செய்யும்.
Read More »மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறை பிரதிநிதிகள், பீகாரில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வு
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் தலைமையிலான மூத்த அதிகாரிகள் குழு, பீகார் பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கான பீகார் உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக அந்த மாநிலத்துக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டது. குழுவில் கூடுதல் செயலாளர் திரு புனித் யாதவ், இணைச் செயலாளர் திருமதி. சரிதா சவுகான் உள்ளிட்டோர் இடம் …
Read More »அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியில் பிரதமர் சார்பாக மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு புனித சால்வை வழங்கினார்
சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இன்று அஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி புனித ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக புனித சால்வையை வழங்கினார். நல்லிணக்கம், ஆன்மிகம் மற்றும் பக்தி ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்வான சிறந்த சூஃபி துறவியை நினைவுகூரும் ஆண்டு உர்ஸ் என வழங்கப்படுகிறது. இந்தப் புனிதமான விளக்கக்காட்சியுடன் இணைந்து, தர்காவிற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் அனுபவத்தையும் வசதியையும் …
Read More »
Matribhumi Samachar Tamil