மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, நாளை (ஜூன் 24, 2025 செவ்வாய்க்கிழமை) உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் மத்திய மண்டல கவுன்சிலின் 25-வது கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் உறுப்பு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இந்தக் …
Read More »ராஷ்டிரபதி தபோவனம் திறப்பு விழா, பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று (20.6.2025) ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். ராஷ்டிரபதி நிகேதனில் அமைக்கப்பட உள்ள ராஷ்டிரபதி தோட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர், பார்வையாளர் வசதி மையம், உணவகம், பத்திரிகை அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார். ராஷ்டிரபதி நிகேதனில் திறந்தவெளி அரங்கை நேற்று (19.06.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன், ராஷ்டிரபதி உத்யான் ஆகியவை குறித்த கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த இடங்களில் …
Read More »நாட்டின் வளத்தில் பீகார் செழிப்புறுவதோடு மிகப் பெரிய பங்களிப்பையும் வெளிப்படுத்தும்: பிரதமர்
பீகார் மாநிலம் சிவானில் இன்று ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், பாபா மகேந்திரநாத், பாபா ஹன்ஸ்நாத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். மா தாவே பவானி, மா அம்பிகா பவானி ஆகியோரையும் அவர் வணங்கினார். நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் …
Read More »பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20, 21 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20,21 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வார். ஜூன் 20 அன்று பீகார் மாநிலம் சிவானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், நண்பகல் 12 மணி வாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார். இதன் பின்னர் ஒடிசாவின் புவனேஸ்வருக்கு பயணம் மேற்கொள்ளும் அவர் பிற்பகல் …
Read More »இமாச்சலப்பிரதேசத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ. 2006 கோடி வழங்குவதற்கு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஒப்புதல்
இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் …
Read More »மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் தலத் திட்டத்தை மத்திய இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் ஆய்வு செய்தார்
சுற்றுலாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பொது மக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் (என்ஐபிசிசிடி) இந்தூர் வளாகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி …
Read More »தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சி: சிஹ்சி மருந்தகம் சென்னைவாசிகளுக்கான இரண்டாவது இலவச மருத்துவ முகாமுடன் ‘மக்களுக்கு முன்னுரிமை சுகாதாரம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
சென்னை, ஜூன் 15. சென்னையின் முன்னணி – சிஹ்சி மருந்தகம், தந்தையர் தினத்தை நினைவுகூரும் வகையில் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை அதன் வளசரவாக்கம் கிளையில் இலவச மருத்துவ முகமை வெற்றிகரமாக நடத்தியது. முகாம் செயல்பட்ட நான்கு மணி நேரத்திற்குல் 200 க்கும் மேற்பட்டோர், பல முதியவர்கள் மற்றும் மகளிர் முகாமில் கலந்து கொண்டதால், இந்த முகாம் மகத்தான வரவேற்பை பெற்றது. பங்கேற்பாளர்களுக்கு, முழுமையான ஒரு பரிசோதனைக்குப் பிறகு, அவர்களின் உடல்நிலை குறித்து …
Read More »சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குத் தயாராகிறது விசாகப்பட்டினம்: ஏற்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகளின் முக்கிய ஆய்வுக் கூட்டம்
சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. 11-வது ஆண்டு கொண்டாட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேசிய அளவிலான நிகழ்ச்சியை நடத்த விசாகப்பட்டினம் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். கடைசி நிலையில் உள்ள நபருக்கும் யோகாவை எடுத்துச் செல்ல வேண்டும் …
Read More »கேதார்நாத் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து – தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
ஆர்யன் ஏவியேஷன் நிறுவனம் கேதார்நாத்துக்கு இயக்கிய பெல் 407 ஹெலிகாப்டர் (பதிவு விடி-பிகேஏ) இன்று (15.06.2025) ஒரு துயர விபத்தில் சிக்கியது. அதில் ஐந்து பயணிகள், ஒரு குழந்தை, ஒரு பணியாளர் ஆகியோர் பயணித்தனர். ஹெலிகாப்டர் குப்த்காஷியில் இருந்து காலை 05:10 மணிக்கு புறப்பட்டு, ஸ்ரீ கேதார்நாத் ஜி ஹெலிபேடில் காலை 05:18 மணிக்கு தரையிறங்கியது. அது மீண்டும் காலை 05:19 மணிக்கு குப்த்காஷிக்கு புறப்பட்டது. ஆனால் அந்த ஹெலிகாப்டர் …
Read More »தென் மாநிலங்களில் நுகர்வோர் நீதித் துறை அமைப்பை வலுப்படுத்த, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை சென்னையில் பிராந்தியப் பயிலரங்கை நடத்தியது
நுகர்வோர் குறை தீர்க்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, நேற்று (ஜூன் 13, 2025) சென்னையில் “தென் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நுகர்வோர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் பிராந்திய பயிலரங்கு ஒன்றை நடத்தியது. இதில் பங்கேற்று முக்கிய உரையாற்றிய, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் திருமதி நிதி கரே, நுகர்வோர் உரிமை இணையதளத்தை மேம்படுத்துதல், தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல் போன்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். இவை நுகர்வோர் குறைகளை விரைந்து தீர்க்க வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார். நுகர்வோர் வழக்குகளுக்கான தீர்வு விகிதங்களில் தென் மாநிலங்களின் முன்மாதிரியான செயல்திறனை அவர் பாராட்டினார். 2025-ம் ஆண்டில், தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு 5.41 லட்சம் புகார்கள் வந்தன எனவும் இதில் 23% தென் மாநிலங்களிலிருந்து வந்தன என்றும் அவர் தெழிவித்தார். இது வலுவான பிராந்திய ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். தேசிய அளவில் தாக்கல் செய்யப்பட்ட 28.54 லட்சம் வழக்குகளில், 5.62 லட்சம் வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன என அவர் கூறினார். 11,900க்கும் மேற்பட்ட வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பயிலரங்கில் நான்கு கருப்பொருள் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன. நீதித்துறை பிரதிநிதிகள், நுகர்வோர் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் திரு சத்யபிரதா சாஹூ, நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனங்களை வலுப்படுத்த திறன் மேம்பாடு, பயிற்சி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, லட்சத்தீவுகள், புதுச்சேரி, அந்தமான் – நிக்கோபார் தீவுகள் ஆகிய தென் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரிகள், மாநில நுகர்வோர் ஆணைய உறுப்பினர்கள், மாவட்ட ஆணையங்களின் தலைவர்கள், மாவட்ட ஆணையங்களின் உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும், தென் மாநிலங்களைச் சேர்ந்த தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளும் இதில் பங்கேற்றன. भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : …
Read More »
Matribhumi Samachar Tamil