முன்னாள் பிரதமர் மறைந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடமான ஸ்மிருதி ஸ்தல் ‘சதைவ் அடல்‘-ல் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார் இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நல்ல நிர்வாகம், பொது நலனுக்கான அடல் பிஹாரி வாஜ்பாயின் அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து வழிகாட்டும். அடல் பிஹாரி வாஜ்பாய் …
Read More »மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை தலைமையகத்திற்குச் சென்றார்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, புதுதில்லியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்திற்குச் சென்றார். உள்துறை அமைச்சர் படையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து, சிஆர்பிஎஃப்-பின் செயல்பாடுகள், நிர்வாக செயல்திறன் குறித்து விரிவான ஆய்வு செய்தார். மத்திய உள்துறை செயலாளர் உட்பட உள்துறை அமைச்சகத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமை இயக்குநர் திரு அனிஷ் தயாள் …
Read More »மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, புதிதாக நிறுவப்பட்ட 10,000 கூட்டுறவு சங்கங்களை தொடங்கி வைத்தார்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள 10,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மத்திய கூட்டுறவு இணை அமைச்சர்கள் திரு கிரிஷன் பால், திரு முரளிதர் மொஹால், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். …
Read More »உத்தராகண்டில் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மத்திய உள்ளதுறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தப்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறைச் செயலாளர், உத்தராகண்ட் தலைமைச் செயலாளர், உத்தரகண்ட் காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். …
Read More »10,000-க்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லி, பூசாவில் உள்ள ஐசிஏஆர் மாநாட்டு மையத்தில் 2024 டிசம்பர் 25, அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் புதிதாக நிறுவப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு சங்கங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவுச் சான்றிதழ்கள், ரூபே கிசான் கடன் அட்டைகள், மைக்ரோ ஏடிஎம்களை திரு அமித் ஷா வழங்குவார். இந்த நிதிக் கருவிகள் பஞ்சாயத்துகள் அளவில் கடன் சேவைகளை எளிதாக அணுகுவதற்கும் நிதி …
Read More »புலனாய்வு அலுவலகத்தின் (உளவுத்துறை -ஐ.பி.) நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவு- மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று 37 வது புலனாய்வு அலுவலக நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு அலுவலகத்தின் இயக்குநர், புலனாய்வு அலுவலகத்தின் முன்னாள் இயக்குநர்கள், மத்திய காவல் படைகள், மத்திய ஆயுத காவல் படைகளின் தலைமை இயக்குநர்கள், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் …
Read More »மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, திரிபுராவின் தலாய் பகுதியில் ரூ .668 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று திரிபுராவின் தலாய் பகுதியில் ரூ.668 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தலாய் பகுதியில் உள்ள ஹடுக்லாவ் பாரா புரு செட்டில்மென்ட் காலனியில் (புருஹா பாரா) புரு ரியாங் சமூகத்தினருடன் திரு அமித் ஷா உரையாடினார், மேலும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில், திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா, மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு துறை இயக்குநர் மற்றும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் தலைமை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், புரு ரியாங் சமூகத்தைச் சேர்ந்த 38,000 பேரை குடியமர்த்த மத்திய அரசு வசதி செய்துள்ளது என்று கூறினார். சுமார் 25 ஆண்டுகளாக, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் புரு ரியாங் சகோதர சகோதரிகளுக்கு தண்ணீர், கழிப்பறை, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். நீண்ட காலமாக இங்கு ஆட்சி செய்தவர்கள் புரு ரியாங் மக்களின் வலியை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும், ஆனால் மோடி, அவர்களின் துன்பங்களைக் கண்டார், புரிந்துகொண்டார் என்றும் அவர் கூறினார். திரிபுராவில் மாற்றம் ஏற்பட்டு, தங்கள் கட்சி அரசை அமைத்தபோது, அந்த நேரத்தில் மத்தியில் நரேந்திர மோடி அரசும் இருந்தது என்று திரு ஷா குறிப்பிட்டார். அப்போதைய உடன்படிக்கையின் படி, 40,000 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் மற்றும் பெண்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முந்தைய ஆட்சிக் காலத்தில், பல திட்டங்கள் வகுக்கப்பட்டன, ஆனால் அவை ஒருபோதும் நடைமுறைக்கு வரவில்லை என்று அவர் கூறினார். 1998 முதல் மோசமான வாழ்க்கை வாழ்ந்து வரும் புரு ரியாங் சகோதர சகோதரிகளுக்காக பிரதமர் மோடி ஒரு திட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், 11 கிராமங்களை ரூ .900 கோடி செலவில் மறுகுடியமர்த்தவும் ஒரு திட்டத்தை உருவாக்கினார் என்று திரு அமித் ஷா கூறினார். இந்த கிராமங்களில் தற்போது மின்சாரம், சாலைகள், குடிநீர், இணைப்பு, சூரிய ஒளி தெரு விளக்குகள், மானிய விலையில் தானியக் கடைகள், அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த 11 காலனிகளில் வசிக்கும் மக்களுக்கும் நாட்டின் மற்ற குடிமக்களைப் போலவே அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். இந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக மோடி அரசு அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், சுகாதார அட்டைகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளையும் வழங்கியுள்ளது என்றும் திரு ஷா மேலும் கூறினார். இந்த மக்களுக்கு தற்போது 1200 சதுர அடி மனைகள் சொந்தமாக இருப்பதாகவும், மத்திய அரசின் உதவியுடன் அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கூடுதலாக, மோடி அரசு அவர்களுக்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ 5000 உதவித்தொகையை வழங்குகிறது. முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் 2.5% மக்களுக்கு மட்டுமே குடிநீர் வசதி இருந்தது, ஆனால் இன்று 85% வீடுகளில் குழாய் நீர் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். முன்னதாக, எந்தவொரு ஏழைக்கும் இலவச ரேஷன் கிடைக்கவில்லை, ஆனால் இன்று, மோடி தலைமையின் கீழ், திரிபுராவில் 82% மக்கள் 5 கிலோ அரிசியை இலவசமாகப் பெறுகிறார்கள். திரிபுராவில் உள்ள 80% மக்களின் முழு சுகாதார செலவுகளையும் ரூ .5 லட்சம் வரை மோடி அரசு ஏற்றுக்கொள்கிறது என்று திரு ஷா குறிப்பிட்டார். திரிபுராவில் முதலீடுகள் வருகின்றன, சாலைகள் கட்டப்பட்டுள்ளன, மின்சாரம் மற்றும் கழிப்பறைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார். திரிபுராவில் இடைநிற்றல் விகிதம் 3% க்கும் குறைவாக குறைந்துள்ளது, மேலும் சேர்க்கை 67% முதல் 99.5% வரை அதிகரித்துள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வரும்போது, அது நாட்டினதும் மாநிலத்தினதும் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை மோடி அரசும், திரிபுரா அரசும் காட்டியுள்ளன என்று திரு ஷா கூறினார். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசும், திரிபுராவில் திரு பிப்லப் தேப் மற்றும் தற்போது பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா ஆகியோரின் அரசுகளும் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றன என்று அவர் வலியுறுத்தினார். மா திரிபுர சுந்தரியின் பிரமாண்டமான கோயிலின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன, இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் தேவியை தரிசனம் செய்வதை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Read More »சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் தியாகிகளுக்கு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா மரியாதை செலுத்தினார்
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நக்சலைட்டுகளை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று மரியாதை செலுத்தினார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரையும், அவர் சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நக்சல் தீவிரவாதத்திற்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் மிக உயர்ந்த தியாகம் செய்த 1,399 தியாகிகளை கௌரவிக்கும் …
Read More »மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ராய்ப்பூரில் சத்தீஸ்கர் காவல்துறையினருக்கு ‘குடியரசுத்தலைவரின் வண்ணம்’ என்னும் கொடியை வழங்கினார்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா மதிப்புமிக்க ‘குடியரசுத்லைவரின் வண்ணம்’ என்னும் கொடியை ராய்ப்பூரில் அம்மாநில காவல்துறைக்கு வழங்கினார். இந்த விழாவில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் திரு விஜய் சர்மா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், எந்தவொரு ஆயுதப் படைக்கும், சிறந்த அங்கீகாரமான இந்த விருதைப் பெறுவதில் உள்ள மகத்தான பெருமையை எடுத்துரைத்தார். சத்தீஸ்கர் காவல்துறை தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளுக்குள் இந்த கவுரவத்தை பெற்றிருப்பதாக பாராட்டிய அவர், குடியரசுத் தலைவரிடம் அது பெற்றுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றார். சத்தீஸ்கர் காவல்துறை நாட்டின் மிகச்சிறந்த படைகளில் ஒன்று என்றும், ஆர்வம், தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது என்றும் திரு ஷா பாராட்டினார். வெள்ளி விழா ஆண்டில் ‘குடியரசுத்தலைவரின் விருதைப் பெறுவது படையின் இடைவிடாத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் பொதுமக்களுடனான ஆழமான தொடர்புக்கு ஒரு சான்றாகும் என்று அவர் வலியுறுத்தினார். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், நக்சலிசத்தை எதிர்த்துப் போராடுவதிலும், போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சத்தீஸ்கர் காவல்துறையின் முன்மாதிரியான சேவையை அவர் மேலும் பாராட்டினார். சத்தீஸ்கரில் அமைதி மற்றும் பாதுகாப்பை வளர்ப்பதில் இந்தப் படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை திரு ஷா புகழ்ந்தார். இன்று சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். சர்தார் பட்டேலின் இணையற்ற தைரியமும், உறுதியும்தான் நாட்டை ஒருங்கிணைத்தது என்று அவர் குறிப்பிட்டார். 370 வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேலின் முடிக்கப்படாத நோக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவேற்றினார், இதன் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன் நிரந்தரமாக ஒருங்கிணைத்தார் என்று திரு ஷா மேலும் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த தேசமும் இன்று மிகுந்த நன்றியுடன் சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்துகிறது என்றும் அவர் கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை திரு அடல் பிஹாரி வாஜ்பாய் நிறைவேற்றினார் என்று திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சத்தீஸ்கர் 2026 மார்ச் 31-க்குள் நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும் என்று உள்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். சத்தீஸ்கரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் நக்சலிசத்தை ஒழிக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இந்த இலக்கை நோக்கி முன்னேறுவதில் சத்தீஸ்கர் காவல்துறையின் துணிச்சலை அவர் பாராட்டினார், மேலும் கடந்த ஆண்டில் நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க சாதனைகளை அவர் எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த ஆண்டு நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் 287 நக்சலைட்டுகளை அழித்துள்ளனர். 1,000 பேரை கைது செய்துள்ளனர், 837 நக்சலைட்டுகளை சரணடைய வைத்துள்ளனர். . கொல்லப்பட்டவர்களில் 14 பேர் நக்சல் தலைவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். நான்கு தசாப்தங்களில் முதல் முறையாக, நக்சல் வன்முறை காரணமாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இறப்பு எண்ணிக்கை 100 க்கும் கீழே குறைந்துள்ளது என்று திரு ஷா எடுத்துரைத்தார், இதற்கு நக்சலிசத்திற்கு எதிரான மோடி அரசாங்கத்தின் கடுமையான கொள்கைகளே காரணம் என்றார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த தசாப்தத்தில், நக்சலிசம் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விளைவாக முந்தைய தசாப்தத்துடன் ஒப்பிடும்போது பாதுகாப்புப் பணியாளர்களின் உயிரிழப்புகளில் 73% குறைவு மற்றும் பொதுமக்கள் இறப்புகளில் 70% சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நக்சலிசத்திற்கு ஒரு தீர்க்கமான அடியை வழங்க மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்ததற்காக சத்தீஸ்கர் காவல்துறையையும் உள்துறை அமைச்சர் பாராட்டினார். மேலும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சத்தீஸ்கரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். 1951 ஆம் ஆண்டில் இந்திய கடற்படைக்கு குடியரசு தலைவரின் இந்த விருது முதன்முலாக வழங்கப்பட்டது என்றும், இன்று, எந்தவொரு ஆயுதப்படையும் இந்த மதிப்புமிக்க கௌரவத்தைப் பெறுவதற்குத் தகுதி பெற 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார். சத்தீஸ்கர் காவல்துறையின் 25 ஆண்டுகால சேவை, அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து கவுரவித்ததற்காக குடியரசுத் தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2026 மார்ச் 31 க்குள் சத்தீஸ்கரில் இருந்து நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசும் மாநில அரசும் உறுதிபூண்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தெரிவித்தார். நக்சலைட்டுகள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்றும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் சென்று சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சத்தீஸ்கர் அரசு ஒரு சிறந்த சரணடைதல் கொள்கையை அமல்படுத்தியுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார், இது சரணடையும் ஒவ்வொரு நக்சலைட்டுக்கும் மறுவாழ்வு அளிக்க வகை செய்கிறது. திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களை உறுதியுடன் எதிர்த்துப் போராடுவதில் சத்தீஸ்கர் காவல்துறை குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். ஜனவரி 1, 2024 மற்றும் செப்டம்பர் 30, 2024 க்கு இடையில், சுமார் 1,100 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இது 21,000 கிலோ கஞ்சா, 6,000 கிலோ ஓபியம் மற்றும் சுமார் 1,95,000 சட்டவிரோத மருந்துகள் பறிமுதல் செய்ய வழிவகுத்தது. மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிஎன்டிபிஎஸ் (போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்களில் சட்டவிரோத கடத்தலைத் தடுப்பது) சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதில் சத்தீஸ்கர் முன்னணியில் உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியும், பணியாளர்களும் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் சத்தீஸ்கரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். ‘குடியரசு தலைவரின் வண்ணம் ‘ என்பது வெறும் அலங்காரம் அல்ல, சேவை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம் என்று சத்தீஸ்கர் காவல்துறை பணியாளர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்தச் சின்னம் மீள்திறனுடன் எதிர்கொள்ள வேண்டிய எண்ணற்ற சவால்களை நினைவூட்டுவதாக செயல்படுகிறது என்று அவர் கூறினார். இது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பொறுப்பும் கூட, சத்தீஸ்கர் காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியும் இந்த பொறுப்பை நிலைநிறுத்துவார்கள் என்றும், தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டார்கள் என்றும் திரு அமித் ஷா வலியுறுத்தினார்.
Read More »
Matribhumi Samachar Tamil