அசாம் மாநிலம் குவஹாத்தியில் மத்திய மீன்வளத் துறையின் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்கள் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய ரூ.50 கோடி மதிப்பிலான 50 முக்கிய திட்டங்களை அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற வடகிழக்கு …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரெயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய ரெயில் நிலையத்தையும் தொடங்கி வைத்தார். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து …
Read More »மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மேற்கு வங்க மாநிலம் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார்
ஃபுலியா இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் புதிய நிரந்தர வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் திறந்து வைத்தார். இந்நிறுவனத்தின் புதிய வளாகம் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5.38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த வளாகத்தில் ரூ. 75.95 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், நவீன சோதனைக் கூடங்கள் அடங்கிய நவீன உள்கட்டமைப்பு உள்ளது. புதிய வளாகம் ஒரு முன்மாதிரியான …
Read More »தில்லியில் தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம்-2025ஐ குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்
2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தில்லி கண்டோன்மென்ட் நகரில் தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம்-2025 ஐ குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 17 என்சிசி இயக்குநரகங்களில் இருந்து 917 பேர் உட்பட 2361 கேடட்கள் 27 ஜனவரி 2025 அன்று பிரதமரின் பேரணியுடன் …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
ரூ 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களின் முக்கிய கவனம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதும் பயணத்தை எளிதாக்குவதும் ஆகும். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலிலும் பிரதமர் பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று தில்லி-என்சிஆர் இந்திய அரசிடமிருந்து குறிப்பிடத்தக்க பரிசைப் பெற்றுள்ளது என்றும், இந்தியாவின் நகர்ப்புற இயக்கம் மேலும் விரிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நமோ பாரத் ரயிலில் சாஹிபாபாத்தில் இருந்து நியூ அசோக் நகர் வரை பகலில் பயணம் செய்ததை நினைவு கூர்ந்த திரு மோடி, வளர்ச்சியடைந்த இந்திய நகரங்களில் பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் பல இளைஞர்களுடன் உரையாடியதாக கூறினார். நமோ பாரத் திட்டம் நிறைவேறியதும், தில்லி-மீரட் பாதையில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தில்லி-என்சிஆர் மக்களுக்கு அவர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பு பயணத்தில் இன்று மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு தற்போது 1,000 கிலோமீட்டர்களை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டினார். 2014-ம் ஆண்டில், நாடு தங்களுக்கு வாய்ப்பு வழங்கியபோது, மெட்ரோ இணைப்பின் அடிப்படையில் இந்தியா உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் கூட இல்லை என்றும், கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா மெட்ரோ கட்டமைப்பில், உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய தனது அரசின் ஆட்சிக் காலத்தில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்று பிரதமர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு 248 கிலோமீட்டர்கள் மட்டுமே என்றும், அது வெறும் ஐந்து நகரங்களில் மட்டுமே இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் 752 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய மெட்ரோ பாதைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். இன்று, நாடு முழுவதும் 21 நகரங்களில் மெட்ரோ சேவைகள் செயல்படுகின்றன, தற்போது 1,000 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடங்கள் விரைவான வளர்ச்சியில் உள்ளன. தில்லி மெட்ரோ விரிவாக்கம், இரண்டு புதிய வழித்தடங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டல் ஆகியவற்றைக் குறிப்பிட்ட திரு மோடி, குர்கானுக்குப் பிறகு, ஹரியானாவின் மற்றொரு பகுதி தற்போது மெட்ரோ கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார். ரிதாலா-நரேலா-குண்ட்லி வழித்தடம் தில்லி மெட்ரோ கட்டமைப்பின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றாக இருக்கும், தில்லி மற்றும் ஹரியானாவில் உள்ள முக்கிய தொழில்துறை மையங்களுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கு பயணத்தை இது எளிதாக்குகிறது. மத்திய அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, தில்லியில் மெட்ரோ வழித்தடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 2014-ல் தில்லி-என்சிஆர் பகுதியில் மொத்த மெட்ரோ கட்டமைப்பு 200 கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்தது என்றும், இன்று அது இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். “கடந்த பத்தாண்டுகளாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு முதன்மையான கவனம் செலுத்தி வருகிறது” என்று திரு மோடி கூறினார். பத்தாண்டுகளுக்கு முன்பு, உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் சுமார் ரூ 2 லட்சம் கோடியாக இருந்தது, அது இப்போது ரூ 11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நவீன இணைப்புக்கு, குறிப்பாக நகரங்களுக்குள் மற்றும் ஒரு நகரத்தை மற்றொரு நகரத்துடன் இணைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தில்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விரைவுச் சாலைகள் உருவாகி வருவதாகவும், தில்லி தொழில் வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய தலைநகரப் பகுதியில் பெரிய பன்னோக்கு சரக்கு போக்குவரத்து மையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் இரண்டு சரக்கு வழித்தடங்கள் குவிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும் திரு மோடி எடுத்துரைத்தார். “ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் உட்பட அனைவருக்கும் கண்ணியமான மற்றும் தரமான வாழ்க்கையை உறுதி செய்ய நவீன உள்கட்டமைப்பு உதவுகிறது” என்று அவர் மேலும் கூறினார். பரம ஏழைகளுக்கும் மருத்துவ வசதி சென்றடைய வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், ஆயுஷ், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளையும் அரசு ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் ஆயுஷ் முறை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். பாரம்பரிய மருத்துவம் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் முதலாவது நிறுவனம் இந்தியாவில் நிறுவப்பட்டிருப்பதை திரு மோடி எடுத்துரைத்தார். சில வாரங்களுக்கு முன்பு, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் இரண்டாம் கட்டத்தை தாம் தொடங்கி வைத்ததாகவும் அவர் கூறினார். இன்று, மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகக் குறிப்பிட்ட திரு மோடி, இந்த சாதனைக்காக தில்லி மக்களுக்கு தனது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “உலகின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தலைநகராக மாறுவதற்கு இந்தியாவுக்கு மகத்தான ஆற்றல் உள்ளது” என்று பிரதமர் கூறினார். “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்பதுடன், “இந்தியாவில் குணப்படுத்துவோம்” என்பதை மந்திரமாக உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு மக்கள் இந்தியாவில் ஆயுஷ் சிகிச்சைகளைப் பெறுவதற்கு வசதியாக சிறப்பு ஆயுஷ் விசா வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் இந்த வசதியின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் இந்த முயற்சிகள் தில்லியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வினய் குமார் சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி. அதிஷி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னணி பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையேயான சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோமீட்டர் நீளமுள்ள தில்லி-காஸியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்த தொடக்க விழாவின் மூலம், தில்லி தனது முதல் நமோ பாரத் இணைப்பைப் பெறுகிறது. இது தில்லி மற்றும் மீரட் இடையேயான பயணத்தை கணிசமாக எளிதாக்கும், மேலும் இணையற்ற பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் அதிவேக மற்றும் வசதியான பயணம் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும். தில்லி மெட்ரோவின் ஜனக்புரி முதல் கிருஷ்ணா பூங்கா வரையிலான நான்காம் கட்டம் வரையிலான 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதி இதுவாகும். மேற்கு தில்லியின் கிருஷ்ணா பூங்கா, விகாஸ்புரியின் சில பகுதிகள், ஜனக்புரி போன்ற பகுதிகள் பயனடையும். தில்லி மெட்ரோ நான்காம் கட்டத்தின் 26.5 கிலோமீட்டர் தொலைவுக்கான ரிதாலா – குண்ட்லி பிரிவுக்கு ரூ.6,230 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த வழித்தடம் தில்லியில் உள்ள ரிதாலாவை ஹரியானாவில் உள்ள நாதுப்பூருடன் (குண்ட்லி) இணைக்கும், டெல்லி மற்றும் ஹரியானாவின் வடமேற்கு பகுதிகளில் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். பயனடைய வேண்டிய முக்கிய பகுதிகள் ரோஹினி, பவானா, நரேலா மற்றும் குண்ட்லி ஆகியவை அடங்கும், குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் இதன் முக்கிய நோக்கமாகும். இது செயல்பாட்டுக்கு வந்தவுடன், நீட்டிக்கப்பட்ட சிவப்பு கோடு வழியாக தில்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பயணிக்க உதவும். புதுதில்லி ரோகிணியில் சுமார் 185 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த வளாகம் அதிநவீன சுகாதார மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை வழங்கும். புதிய கட்டிடத்தில் நிர்வாகத் தொகுதி, வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு மற்றும் ஒரு பிரத்யேக சிகிச்சை பிரிவு ஆகியவை இருக்கும். இது நோயாளிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற சுகாதார அனுபவத்தை உறுதி செய்யும்.
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்
புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின் கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப் பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் …
Read More »தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், திரளாகக் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு மோடி, அவர்களுக்கு தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2025-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் …
Read More »மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, புதிதாக நிறுவப்பட்ட 10,000 கூட்டுறவு சங்கங்களை தொடங்கி வைத்தார்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள 10,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மத்திய கூட்டுறவு இணை அமைச்சர்கள் திரு கிரிஷன் பால், திரு முரளிதர் மொஹால், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். …
Read More »மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, திரிபுராவின் தலாய் பகுதியில் ரூ .668 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று திரிபுராவின் தலாய் பகுதியில் ரூ.668 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தலாய் பகுதியில் உள்ள ஹடுக்லாவ் பாரா புரு செட்டில்மென்ட் காலனியில் (புருஹா பாரா) புரு ரியாங் சமூகத்தினருடன் திரு அமித் ஷா உரையாடினார், மேலும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில், திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா, மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு துறை இயக்குநர் மற்றும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் தலைமை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், புரு ரியாங் சமூகத்தைச் சேர்ந்த 38,000 பேரை குடியமர்த்த மத்திய அரசு வசதி செய்துள்ளது என்று கூறினார். சுமார் 25 ஆண்டுகளாக, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் புரு ரியாங் சகோதர சகோதரிகளுக்கு தண்ணீர், கழிப்பறை, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். நீண்ட காலமாக இங்கு ஆட்சி செய்தவர்கள் புரு ரியாங் மக்களின் வலியை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும், ஆனால் மோடி, அவர்களின் துன்பங்களைக் கண்டார், புரிந்துகொண்டார் என்றும் அவர் கூறினார். திரிபுராவில் மாற்றம் ஏற்பட்டு, தங்கள் கட்சி அரசை அமைத்தபோது, அந்த நேரத்தில் மத்தியில் நரேந்திர மோடி அரசும் இருந்தது என்று திரு ஷா குறிப்பிட்டார். அப்போதைய உடன்படிக்கையின் படி, 40,000 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் மற்றும் பெண்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முந்தைய ஆட்சிக் காலத்தில், பல திட்டங்கள் வகுக்கப்பட்டன, ஆனால் அவை ஒருபோதும் நடைமுறைக்கு வரவில்லை என்று அவர் கூறினார். 1998 முதல் மோசமான வாழ்க்கை வாழ்ந்து வரும் புரு ரியாங் சகோதர சகோதரிகளுக்காக பிரதமர் மோடி ஒரு திட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், 11 கிராமங்களை ரூ .900 கோடி செலவில் மறுகுடியமர்த்தவும் ஒரு திட்டத்தை உருவாக்கினார் என்று திரு அமித் ஷா கூறினார். இந்த கிராமங்களில் தற்போது மின்சாரம், சாலைகள், குடிநீர், இணைப்பு, சூரிய ஒளி தெரு விளக்குகள், மானிய விலையில் தானியக் கடைகள், அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த 11 காலனிகளில் வசிக்கும் மக்களுக்கும் நாட்டின் மற்ற குடிமக்களைப் போலவே அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். இந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக மோடி அரசு அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், சுகாதார அட்டைகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளையும் வழங்கியுள்ளது என்றும் திரு ஷா மேலும் கூறினார். இந்த மக்களுக்கு தற்போது 1200 சதுர அடி மனைகள் சொந்தமாக இருப்பதாகவும், மத்திய அரசின் உதவியுடன் அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கூடுதலாக, மோடி அரசு அவர்களுக்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ 5000 உதவித்தொகையை வழங்குகிறது. முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் 2.5% மக்களுக்கு மட்டுமே குடிநீர் வசதி இருந்தது, ஆனால் இன்று 85% வீடுகளில் குழாய் நீர் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். முன்னதாக, எந்தவொரு ஏழைக்கும் இலவச ரேஷன் கிடைக்கவில்லை, ஆனால் இன்று, மோடி தலைமையின் கீழ், திரிபுராவில் 82% மக்கள் 5 கிலோ அரிசியை இலவசமாகப் பெறுகிறார்கள். திரிபுராவில் உள்ள 80% மக்களின் முழு சுகாதார செலவுகளையும் ரூ .5 லட்சம் வரை மோடி அரசு ஏற்றுக்கொள்கிறது என்று திரு ஷா குறிப்பிட்டார். திரிபுராவில் முதலீடுகள் வருகின்றன, சாலைகள் கட்டப்பட்டுள்ளன, மின்சாரம் மற்றும் கழிப்பறைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார். திரிபுராவில் இடைநிற்றல் விகிதம் 3% க்கும் குறைவாக குறைந்துள்ளது, மேலும் சேர்க்கை 67% முதல் 99.5% வரை அதிகரித்துள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வரும்போது, அது நாட்டினதும் மாநிலத்தினதும் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை மோடி அரசும், திரிபுரா அரசும் காட்டியுள்ளன என்று திரு ஷா கூறினார். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசும், திரிபுராவில் திரு பிப்லப் தேப் மற்றும் தற்போது பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா ஆகியோரின் அரசுகளும் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றன என்று அவர் வலியுறுத்தினார். மா திரிபுர சுந்தரியின் பிரமாண்டமான கோயிலின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன, இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் தேவியை தரிசனம் செய்வதை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Read More »சிஎஸ்ஐஆர் – என்ஐஎஸ்சிபிஆர்-ன் புதுப்பிக்கப்பட்ட தளத்தை சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி திறந்து வைத்து, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார்
புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்-அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசியக் கல்விக்கழக (என்ஐஎஸ்சிபிஆர்) வளாகத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது தளத்தை 2024, டிசம்பர் 13 அன்று சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சித் துறை (டிஎஸ்ஐஆர்) செயலாளருமான டாக்டர் என். கலைச்செல்வி திறந்துவைத்தார். இது ஆராய்ச்சி நிறுவனத்தின் திறன்களை மேலும் மேம்படுத்தும். இந்த நிகழ்ச்சியையொட்டி தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற மரக்கன்று நடும் இயக்கமும் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு …
Read More »
Matribhumi Samachar Tamil