மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஆதிச்சுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் பெங்களூரு வளாகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நமது கலாச்சாரத்தின் முக்கிய கொள்கை, தன்னைப் பற்றி மட்டுமல்லாமல், அனைவரின் நலன் மற்றும் மகிழ்ச்சியைப் பற்றியும் சிந்திப்பது என்று கூறினார். ஸ்ரீ ஆதிச்சுஞ்சனகிரி மடம் கிராமங்களில் சுகாதார மையங்களை நடத்துவதன் மூலமும், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை …
Read More »குடியரசுத்தலைவர் பிப்ரவரி 14 மற்றும் 15 இரு நாட்கள் கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிப்ரவரி 14 மற்றும் 15 இரு நாட்கள் கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 14-ம் தேதி, பெங்களூரில், வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 10-வது சர்வதேச மகளிர் மாநாட்டின் தொடக்க அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 15-ம் தேதி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் – மேஸ்ராவின் பிளாட்டின விழா கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்.
Read More »கர்நாடகாவில் இரண்டு பேருக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது
கர்நாடகாவில் இரண்டு பேர் ஹியூமன் மெட்டாநியூமோ வைரசால் (எச்.எம்.பி.வி) பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (ஐ.சி.எம்.ஆர்) கண்டறிந்துள்ளது. நாடு முழுவதும் சுவாச பாதிப்பு நோய்களைக் கண்காணிப்பதற்கான ஐ.சி.எம்.ஆரின் தற்போதைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளுக்காக மேற்கொள்ளப்படும் வழக்கமான கண்காணிப்பு மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். எச்.எம்.பி.வி பாதிப்பு ஏற்கனவே இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ளதாகவும், எச்.எம்.பி.வி உடன் தொடர்புடைய சுவாச …
Read More »
Matribhumi Samachar Tamil