Friday, December 05 2025 | 04:17:07 PM
Breaking News

Tag Archives: Narendra Modi

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமது சட்டத் தொழிலை பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் நாட்டின் இளைய வயதுடைய ஆளுநராக திகழ்ந்தார் என்றும் தமது பதவிக் காலத்தில் மிசோரம் மக்களிடம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றவாதியாக இருந்த அவருடைய நுண்ணறிவும் குறிப்பிடத்தக்கவை என்று திரு மோடி கூறியுள்ளார். இது …

Read More »

சர்வதேச சிறுத்தைகள் தினத்தையொட்டி வனவிலங்கு ஆர்வலர்களுக்குப் பிரதமர் வாழ்த்து

சர்வதேச சிறுத்தைகள் தினமான இன்று (04.12.2025), சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வனவிலங்குப் பாதுகாவலர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அற்புதமான விலங்கைப் பாதுகாப்பதற்கும், அது செழித்து வளரக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் மத்திய அரசு சிறுத்தைகள் திட்டத்தைத் தொடங்கியதை அவர் குறிப்பிட்டுள்ளார். இழந்த சுற்றுச்சூழல் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், நமது பல்லுயிர் சூழலை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு …

Read More »

கடற்படை தினத்தையொட்டி கடற்படை வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து

கடற்படை தினமான இன்று (04.12.2025), கடற்படை வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நமது கடற்படை, அசாத்தியமான துணிச்சலுக்கும் உறுதித் தன்மைக்கும் அடையாளமாகத் திகழ்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நமது கடற்படையினர் நமது கடற்கரைகளையும் கடல்சார் நலன்களையும் பாதுகாக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளியைத் தாம் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அந்த நாளை ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை …

Read More »

அசாம் தினத்தையொட்டி அசாம் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

அசாம் தினத்தையொட்டி அசாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஸ்வர்கதேயோ சாவோலுங் சுகபா-வின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசாம் மாநில வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய மற்றும் அசாம் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். …

Read More »

தண்டக்ரம பாராயணத்தை நிறைவு செய்த வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவுக்கு பிரதமர் வாழ்த்து

சுக்ல யஜுர்வேதத்தின் மத்யந்தினி பிரிவின் 2000 மந்திரங்களைக் கொண்ட தண்டக்ரம பாராயணத்தை 50 நாட்களில் எந்த இடைவேளையும்  இல்லாமல் முடித்ததற்காக வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 19 வயதான வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவின் இந்த சாதனையை வருங்காலத் தலைமுறையினர் நினைவு கூர்வார்கள் என்று திரு. மோடி கூறியுள்ளார்.  “காசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்  என்ற முறையில், இந்த அசாதாரணமான சாதனை இந்தப் …

Read More »

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இன்று முதல் முறையாகத் தலைமை தாங்கிய குடியரசு துணைத்தலைவர்  திரு சி பி ராதாகிருஷ்ணனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நாள் பெருமை சேர்க்கும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். “அவையின் சார்பாகவும், என் சார்பாகவும், உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று திரு மோடி கூறினார். ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த திரு ராதாகிருஷ்ணன் …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.11.2025) மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் படங்களுடன் சமூக வலைதளத்தில் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தனித்தனி பதிவுகளில் கூறியிருப்பதாவது: “நவம்பர் மாதம் பல உத்வேகங்களைக் கொண்டு வந்துள்ளது” “உணவு தானிய உற்பத்தியில் இந்தியா ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.” “புனேவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, இஸ்ரோ ஏற்பாடு செய்த தனித்துவமான ட்ரோன் போட்டியில் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை பிரதமர் திரு நரேந்திர எடுத்துரைத்தார்.” “இந்தியா முழுவதும் ஒரு இனிமையான புரட்சி!” “ஐரோப்பாவிலிருந்து சவுதி அரேபியா வரை, உலகம் கீதையை எவ்வாறு கொண்டாடுகிறது என்பதைப் பிரதமர் திரு நரேந்திர பகிர்ந்து கொண்டார்.” ” ஜாம் சாஹேப்பின் உலகம் போற்றும் அரிய பங்களிப்புகள்…” “உயர்ந்த கல்வித் தகுதி பெற்ற இளம் நிபுணர்கள் இப்போது இயற்கை விவசாயத்தை ஏற்று செயல்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” “நான்காவது காசி-தமிழ் சங்கமம் டிசம்பர் 2-ம் தேதி காசியில் உள்ள நமோ படித்துறையில் தொடங்குகிறது. காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” “ஐஎன்எஸ் மஹே இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் உள்நாட்டு வடிவமைப்பு பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.” “உத்தராகண்டில் குளிர்கால சுற்றுலா பலரை ஈர்க்கிறது.” “பகவான் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் மீது பல நாடுகளில் உற்சாகம் காணப்படுகிறது. உலகம் முழுவதற்கும், புத்தரின் நினைவுச்சின்னங்களை அனுப்பியதற்காக அந்நாடுகளின் மக்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.” “உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்!” “விளையாட்டுகளில் இந்தியா அதிகம் சாதித்த மாதம்!” “நவம்பர் மாத்ததில் 140 கோடி இந்தியர்களும் பெருமிதம் கொள்ளும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் சில: அயோத்தியில் தர்ம த்வஜாரோஹண விழா. பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழா. வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா. இந்தியா உலகளாவிய கப்பல் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையமாக மாறும் நிலையை நெருங்கியது. வலிமை மற்றும் தன்னம்பிக்கையின் துடிப்பான அடையாளமான ஐஎன்எஸ் மாஹே செயல்பாட்டுக்கு வந்தது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் இன்ஃபினிட்டி வளாகத்தின் திறப்பு விழா. உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது.” “இந்தியாவின் இளைய தலைமுறையினர் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் அற்புதங்களைச் செய்து வருகின்றனர். ட்ரோன்கள் மீதான நமது இளைஞர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி இது.” “ஜம்மு காஷ்மீர் முதல் கர்நாடகா, நாகாலாந்து வரை, இந்தியாவின் விவசாயிகள் தேன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து வருகின்றனர். இந்தத் துறையில் காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.” …

Read More »

ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “இன்று முதல் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை புதிய பாதையில் பயணிக்கிறது. சஃப்ரானின் புதிய நிறுவனம் இந்தியாவை உலகளாவிய …

Read More »

குருதேக் பகதூர்ஜியின் 350-வது தியாக தினம்: குருக்ஷேத்திரத்தில் பிரதமர் உரை

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற ஸ்ரீ குருதேக் பகதூர்ஜியின் 350-வது ஷஹீதி திவஸ் (தியாக தினம்) நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றினார். காலையில் அயோத்தியிலும் மாலையில் குருக்ஷேத்திரத்திலும் இருப்பதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியம் சங்கமிப்பதாக அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் அயோத்தியில் தர்ம துவஜம் நிலைநாட்டப்பட்ட வேளையில், சீக்கிய சங்கத்திடமிருந்து ஆசிகளைப் பெறும் வாய்ப்பு கிடைத்ததாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். குருக்ஷேத்திரத்தின் புண்ணிய பூமியில் நீதியைக் …

Read More »

பிரதமர் சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா தொழிற்சாலையை நவம்பர் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர்  விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்பு பொருளாதார மண்டலத்தில்  அமைந்துள்ள சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா (SAESI) தொழிற்சாலையை திறந்து வைப்பார். இது ஏர்பஸ் மற்றும் போயிங் 737  விமானங்களுக்கு சக்தி அளிக்கும் லீடிங் எட்ஜ் ஏவியேஷன் ப்ராபல்ஷன் எஞ்சின்களுக்கான சாஃப்ரானின் பிரத்யேக …

Read More »