இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இப்போது வரி குறைப்புக்கு மட்டுமல்லாமல் அதற்கு அப்பால், பொருளாதாரத்தை வலுப்படுத்தி, பல லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி ஒரு பரந்த நோக்கத்தைக் கொண்டதாக அமைந்துள்ளன என்பதை விளக்கும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல் என்றும், இது பெண்கள் தலைமையிலான முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்றும் …
Read More »அசாம் மாநிலம் நம்ரூப்பில் உரத் தொழிற்சாலைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள நம்ரூப்பில், அசாம் பள்ளத்தாக்கு உர- வேதியியல் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் அமோனியா-யூரியா உரத் தொழிற்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.12.2025) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இது சாவோலுங் சுகபா, மகாவீர் லச்சித் போர்புகான் போன்ற சிறந்த வீரர்களின் பூமி என்று குறிப்பிட்டார். பீம்பர் டியூரி, ஷாஹீத் குஷால் குன்வர், மோரன் மன்னர் போடோசா, …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாமின் குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு மோடி, இன்று அசாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் திருவிழா என்று கூறினார். முன்னேற்றத்தின் ஒளி மக்களைச் சென்றடையும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையும் புதிய உயரங்களைத் தொடத் தொடங்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும், அசாமின் முதல் முதலமைச்சரும், மாநிலத்தின் பெருமைக்குரியவருமான கோபிநாத் பர்தோலோயின் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார். திரு பர்தோலோய் அசாமின் அடையாளம், எதிர்காலம் மற்றும் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றும், அவரது சிலை எதிர்காலச் சந்ததியினருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து, அவர்களுக்கு அசாம் மீது ஆழ்ந்த பெருமை உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். “நவீன விமான நிலைய வசதிகளும் மேம்பட்ட இணைப்பு உள்கட்டமைப்புகளும் எந்தவொரு மாநிலத்திற்கும் புதிய சாத்தியக்கூறுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் நுழைவாயிலாக அமைகின்றன, மேலும் மக்களிடையே வளர்ந்து வரும் நம்பிக்கை மற்றும் திடமான உணர்வின் தூண்களாக நிற்கின்றன”, என்று பிரதமர் கூறினார். அசாமில் பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளும் விமான நிலையங்களும் கட்டப்படுவதை மக்கள் காணும்போது, அசாமிற்கு உண்மையான நீதி இறுதியாக கிடைக்கிறது என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இன்று இந்தியா மீதான உலகின் பார்வை மாறியுள்ளது என்றும், இந்தியாவின் பங்கும் மாறியுள்ளது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். வெறும் 11 ஆண்டுகளில் இது எவ்வாறு சாத்தியமானது என்று அவர் கேள்வி எழுப்பியதுடன், நவீன உள்கட்டமைப்பின் வளர்ச்சி இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்றும் வலியுறுத்தினார். ஒரு வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைவதற்காக, உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி இந்தியா 2047-ம் ஆண்டிற்காகத் தயாராகி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த மாபெரும் வளர்ச்சிப் பயணத்தின் மிக முக்கியமான அம்சம் ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தின் பங்கேற்புதான் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒவ்வொரு மாநிலமும் ஒன்றாக முன்னேறி, வளர்ந்த இந்தியா என்ற இலக்கிற்குப் பங்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசு பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கில் அசாமும் வடகிழக்கு மாநிலங்களும் முன்னணியில் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ‘கிழக்கு நோக்கிய கொள்கை’ மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும், இன்று அசாம் இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக உருவெடுத்துள்ளது என்றும் திரு. மோடி தெரிவித்தார். அசாம், இந்தியாவை ஆசியான் நாடுகளுடன் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் தொடக்கம் இன்னும் வெகுதூரம் செல்லும் என்றும், பல துறைகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு உந்துசக்தியாக அசாம் மாறும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். “அசாமும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய நுழைவாயிலாக மாறி வருகின்றன,” என்று திரு. மோடி வலியுறுத்தினார். பல்துறை இணைப்பு குறித்த தொலைநோக்குப் பார்வை இந்தப் பிராந்தியத்தின் நிலையையும் திசையையும் மாற்றியமைத்துள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். அசாமில் புதிய பாலங்கள் கட்டப்படும் வேகம், புதிய மொபைல் கோபுரங்கள் நிறுவப்படும் வேகம் மற்றும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தின் வேகம் ஆகியவை கனவுகளை நனவாக்கி வருவதாக அவர் கூறினார். இந்த நிகழ்வில் அசாம் ஆளுநர் திரு. லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு. சர்பானந்த சோனோவால், திரு. கே. ராம்மோகன் நாயுடு, திரு. முரளிதர் மோஹோல், திரு. பவித்ரா மார்கெரிட்டா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Read More »வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவை எடுத்துரைக்கும் வகையிலான கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்
வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் எழுதிய ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் மேம்பாட்டிற்கான திட்டமிடல் பணிகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல், நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதார வசதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அந்தக் கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு அளிப்பதிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அந்தக் கட்டுரை விளக்குகிறது. சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய அமைச்சர் எழுதிய கட்டுரைக்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது; “அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு @ChouhanShivraj, வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் திட்டமிடல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றை சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில், வாழ்வாதார வசதிகளில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறித்து விரிவாக விளக்கியுள்ளார். இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.”
Read More »ஐதராபாத்தில் அரசு பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களின் தேசிய மாநாட்டை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
தெலங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசு பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களுக்கான தேசிய மாநாட்டை, ஐதராபாத்தில் இன்று (டிசம்பர் 19, 2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய குடியரசுத்தலைவர், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், அரசியலமைப்பின் ஒரு முழுப் பகுதியையும் பணியாளர் தேர்வு ஆணையங்களுக்காகவே அர்ப்பணித்துள்ளனர் என்று கூறினார். இது மத்திய மற்றும் மாநிலங்களுக்கான பணியாளர் தேர்வாணையங்களின் பங்கு மற்றும் செயல்பாடுகளுக்கு அவர்கள் அளித்த …
Read More »பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 20 பிற்பகல் 3 மணி அளவில், குவஹாத்தி செல்லும் பிரதமர், லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டடத்தைப் பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார். புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையக் கட்டடம் சுமார் 1.4 லட்சம் சதுரமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு 1.3 கோடி பயணிகளை கையாளும் …
Read More »பிரதமர் நரேந்திர மோடி – சுல்தான் ஹைதம் பின் தாரிக் சந்திப்பு
அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று மஸ்கட்டில் உள்ள ராயல் அரண்மனையில் அந்நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு ஓமன் சுல்தான் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, சிறப்பான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இந்தச் சந்திப்பு குறித்துத் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 70 ஆண்டு கால நட்புறவு: இரு நாட்டுத் தலைவர்களும் …
Read More »பிரதமரின் ஓமன் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
1) விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் – நெருங்கிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல். – வர்த்தகத் தடைகளைக் குறைத்து, ஒரு நிலையான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரித்தல். – பொருளாதாரத்தின் அனைத்து முக்கியத் துறைகளிலும் வாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடுகளை அதிகரித்தல். 2) கடல்சார் பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் – லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் …
Read More »பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது சர்வதேச உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்
புதுதில்லி பாரத மண்டபத்தில் 2025, டிசம்பர் 19 அன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறும் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது சர்வதேச உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அத்துடன் இந்த நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்ற உள்ளார். ஆராய்ச்சி, நிலைப்படுத்துதல் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பு மூலம் இந்திய அறிவுசார் முறை, முக்கிய பாரம்பரிய மருத்துவ முறையை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் துறைக்கான …
Read More »இந்தியா – ஓமன் இடையேயான கடல்சார் வர்த்தக உறவுகள் நூற்றாண்டுகால பழமை வாய்ந்தது: பிரதமர்
இந்தியா – ஓமன் இடையேயான கடல்சார் வர்த்தக உறவுகள் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் மாண்ட்வி – மஸ்கட் இடையே வலுவான வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மஸ்கட்டில் இன்று நடைபெற்ற இந்தியா – ஓமன் வர்த்தக மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அந்நாட்டுடனான 70 ஆண்டுகால தூதரக உறவுகள் இருநாடுகளுடனான பழமையான நட்புறவையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். இரு நாடுகளுக்கு இடையேயான விரைவான …
Read More »
Matribhumi Samachar Tamil