Saturday, December 06 2025 | 11:55:48 AM
Breaking News

Tag Archives: solar power plant

ராஜஸ்தானில் 435 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்

ராஜஸ்தானில் ஜெலெஸ்ட்ரா இந்தியாவால் உருவாக்கப்பட்ட 435 மெகாவாட் கோர்பியா சூரிய மின்சக்தி திட்டத்தை  மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை  அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ராஜஸ்தான் பாலைவன நிலப்பரப்பிலிருந்து உலகளாவிய தூய்மையான எரிசக்தி மையமாக மாறுவதை சுட்டிக் காட்டினார். “நாங்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு மெகாவாட்டிலும், நாங்கள் மின்சாரத்தை மட்டும் உற்பத்தி செய்யவில்லை, நாங்கள் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார், இந்தத் திட்டம் மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். எட்டு மாதங்களுக்குள் வழங்கப்பட்ட கோர்பியா சூரிய மின்சக்தி திட்டம், 1250 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்திய சூரிய எரிசக்தி  கழகத்துடன் 25 ஆண்டு மின் கொள்முதல் ஒப்பந்தத்தால் ஆதரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் 755 ஜிகாவாட்  சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், தோராயமாக 1.28 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 7.05 லட்சம் டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும். ராஜஸ்தானின் மின்சார திறனில் கிட்டத்தட்ட 70 …

Read More »