मंगलवार, अक्तूबर 22 2024 | 06:58:16 AM
Breaking News
Home / Choose Language / tamil / இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் விமானப்படை இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தொடங்கியது

இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் விமானப்படை இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தொடங்கியது

Follow us on:

இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் குடியரசு விமானப்படை ஆகியவை மேற்கு வங்கத்தின் கலைகுண்டா விமானப்படை நிலையத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியின் 12வது பதிப்பை தொடங்கின.

பயிற்சியின் இருதரப்பு கட்டம் நவம்பர் 13 முதல் இன்று வரை நடத்தப்படும், இது இரு படைகளுக்கும் இடையே தீவிர ஒத்துழைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அவை மேம்பட்ட வான் போர் உருவகப்படுத்துதல்கள், கூட்டுப் பணி திட்டமிடல் மற்றும் விளக்க அமர்வுகளில் ஈடுபடுகின்றன. இருதரப்பு கட்டம் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துதல், போர் தயார்நிலையை கூர்மைப்படுத்துதல் மற்றும் இரு விமானப்படைகளுக்கு இடையே அறிவு பரிமாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எஃப்-16, எஃப்-15 ஸ்குவாட்ரன்கள், ஜி-550 வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு மற்றும் சி-130 விமானங்களைச் சேர்ந்த விமானப் பணியாளர்கள் மற்றும் ஆதரவு வீரர்களை உள்ளடக்கிய சிங்கப்பூர்  விமானப்படை இன்றுவரை அதன் மிகப்பெரிய குழுவுடன் பங்கேற்கிறது. ரஃபேல், மிராஜ் 2000 ஐடிஐ, சுகோய் -30 எம்கேஐ, தேஜஸ், மிக் -29 மற்றும் ஜாகுவார் விமானங்களுடன் இந்திய விமானப்படை பங்கேற்கிறது.

கூட்டு ராணுவப் பயிற்சி அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்தே, இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படை நடத்திய மிகப்பெரிய பன்னாட்டு வான்வழி பயிற்சிகளில் ஒன்றான எக்ஸ்-தரங் சக்தியில் சிங்கப்பூர்  விமானப்படை பங்கேற்ற உடனேயே கூட்டுப் பயிற்சி வருகிறது, இது இரு விமானப்படைகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் தொழில்முறை தொடர்பை இது பிரதிபலிக்கிறது. விமான நடவடிக்கைகளுடன் இரு விமானப் படைகளின் வீரர்களும் அடுத்த ஏழு வாரங்களில் பல விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் போது தொடர்பு கொள்வதால், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வார்கள்.

கூட்டு ராணுவப் பயிற்சி 2024 பல ஆண்டுகளாக ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட வலுவான இருதரப்பு பாதுகாப்பு உறவையும், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பரஸ்பர மரியாதையையும் எடுத்துக்காட்டுகிறது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us