बुधवार, अक्तूबर 23 2024 | 02:54:39 PM
Breaking News
Home / Choose Language / tamil / புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2024 அக்டோபர் 24 அன்று “கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்பு” வெளியிடுவதைத் தொடங்கிவைக்கிறார்

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2024 அக்டோபர் 24 அன்று “கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்பு” வெளியிடுவதைத் தொடங்கிவைக்கிறார்

Follow us on:

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்திய வானிலை ஆய்வுத்துறையுடன் இணைந்து, கிராம பஞ்சாயத்துகளுக்கு தினசரி வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் முயற்சியை நாளை (அக்டோபர் 24)  தொடங்கவுள்ளது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதனைத் தொடங்கிவைக்கிறார்.

கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அடிமட்டத்தில் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும். அரசின் முதல் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி அடிமட்ட நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது. மேலும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. பருவநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க கிராமப்புற மக்களை  ஆயத்தப்படுத்துகிறது.

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் விரிவாக்கப்பட்ட சென்சார் கவரேஜின் ஆதரவுடன், கிராமப் பஞ்சாயத்து மட்டத்தில் உள்ளூர்மயமாக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். அமைச்சகத்தின் டிஜிட்டல் தளங்கள் மூலம் கணிப்புகள் வெளியிடப்பட்டு பகிரப்படும் .இது திறமையான ஆளுகை, திட்டக் கண்காணிப்பு மற்றும் வள மேலாண்மைக்கு உதவுகிறது.  குடிமக்கள் உள்ளூர் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளவும் பிரச்சனைகள் பற்றி புகாரளிக்கவும் அனுமதிப்பதன் மூலம் சமூக ஈடுபாட்டை இந்த வசதி வளர்க்கிறது; கிராம மஞ்சித்ரா, ஒரு இடஞ்சார்ந்த திட்டமிடல் கருவி ஆகும். இது வளர்ச்சித் திட்டங்களுக்கு புவிசார் நுண்ணறிவுகளை வழங்குகிறது.

இந்தத் தொடக்க விழாவில், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்குடன் , அத்துறைக்கான இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகல்,  அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் திரு தேவேஷ் சதுர்வேதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த முன்னோடி முயற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் “கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்புகள்” குறித்த  பயிலரங்கு ஏற்பாடு செய்யப்படும். இந்தப் பயிலரங்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் மாநில பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள். இப்பயிற்சி அமர்வு, ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களுக்கு அடிமட்ட அளவில் வானிலை முன்னறிவிப்பு கருவிகள் மற்றும் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான அறிவு மற்றும் திறன்களை வளர்த்து, சரியான முடிவுகளை எடுக்கவும், தங்கள் சமூகங்களில் பருவநிலை பின்னடைவை மேம்படுத்தவும் உதவும்.

அரசின் முதல் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அங்கமான இந்த முயற்சி, உள்ளூர் அளவிலான நிர்வாகத்தை அதிகரிப்பதற்கும், பருவநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்ட கிராமங்களை வளர்ப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். வானிலை என்பது கணிக்க முடியாததாக மாறி வருவதால், கிராம பஞ்சாயத்து மட்டத்தில் வானிலை முன்னறிவிப்பை அறிமுகப்படுத்துவது விவசாய வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதிலும், இயற்கைப் பேரழிவுகளுக்கு எதிராக கிராமப்புற தயார்நிலையை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய கருவியாக செயல்படும். வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் மேகமூட்டம் குறித்த தினசரி புதிய அறிவிப்புகளை கிராம பஞ்சாயத்துகள் இனி பெறுவதுடன், விதைப்பு, நீர்ப்பாசனம் மற்றும் அறுவடை நடவடிக்கைகள் போன்றவற்றில்  முக்கியமான முடிவுகளை எடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும். இந்தக் கருவிகள் பேரிடர் தயார்நிலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடலையும் வலுப்படுத்தும். மேலும், புயல் மற்றும் கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்து பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு குறுந்தகவல் எச்சரிக்கைகள் அனுப்பப்படும், உயிர்கள், பயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை உறுதி செய்யப்படும். இந்த முயற்சி அடிமட்டத்தில் பருவநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்ட சமூகங்களை உருவாக்குவதற்கான மாற்றமாக இருக்கும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கான ரோபாட்டிக்ஸ் சவால்

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவையின் ( டபிள்யுடிஎஸ்ஏ-2024), ஒரு பக்க நிகழ்வாக நல்ல இளைஞர் சவாலுக்கான ரோபாட்டிக்ஸ் நடைபெற்றது. இது ஒரு மதிப்புமிக்க தேசிய நிகழ்வாகும், இது இந்தியாவின் நல்ல தாக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு-என்னும் நிகழ்ச்சியின்  ஒரு பகுதியாக 17ந்தேதி நடைபெற்றது. மேலும் ஜெனீவாவில் நடைபெறும் இறுதி நிகழ்வுக்கான  தகுதிப் போட்டியாகவும் இது அமைந்தது. இந்த நிகழ்வில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் ரோபாட்டிக்ஸ் மற்றும் கோடிங் ஆகியவற்றில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். மொத்தம் 120 அணிகள் விண்ணப்பித்திருந்தன, அவற்றில் 51 நல்ல இளைஞர் சவாலுக்கான ரோபாட்டிக்ஸ் தீர்வுகளை வழங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டன. போட்டிக்கான கருப்பொருள் பேரழிவு மேலாண்மை மற்றும் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளின் வெற்றியாளர்கள் சர்வதேச அளவில் போட்டியிட ஜூலை 2025 இல் ஜெனீவா செல்வார்கள். அனைத்து மாணவர்களுக்கும் ரோபாட்டிக்ஸ் மற்றும் குறியீட்டு முறையைக் கற்றுக்கொள்வதில் உள்ளடக்கத்தை வளர்த்தல்,   ·நிலையான இலக்குகளுடன் இணைந்த பணிகளை முடிக்க ரோபோக்களை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் நிரல் செய்தல்,    ·குழுப்பணி, சிக்கலைத் தீர்ப்பது மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவை இதன் நோக்கமாகும். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றும் ரோபாட்டிக்ஸ் அமைப்பை உருவாக்குவதே பங்கேற்பாளர்களுக்கு முதல் சவாலாக இருந்தது. இதற்கு, ஒரு உண்மையான பூகம்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு உருவகப்படுத்துதல் இயக்கப்பட்டது, அங்கு ரோபோக்கள் உயிர்களைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டவர்களைத் தங்குமிடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஐடியு துணை பொதுச்செயலாளர் திரு தாமஸ் லாமனவுஸ்காஸ், தொலைத்தொடர்புத் துறை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் ஆகியோர் முக்கிய உரையாற்றினர். விருது வழங்கும் விழாவுடன் இந்தச் சவால் முடிவடைந்தது, அங்கு சீனியர் பிரிவில் வெற்றியாளர்களுக்கு “டெல்லி பப்ளிக் பள்ளி, மதுரா சாலை, தில்லி” யைச் சேர்ந்த “AI முன்னோடிகள்” அணிக்கும், ஜூனியர் பிரிவு விருது “சாண்ட் அதுலானந்த் கான்வென்ட் பள்ளி, கொய்ராஜ்பூர், வாரணாசி, உத்தரப்பிரதேசம் (உ.பி) “சாண்ட் அதுலானந்த் கான்வென்ட் பள்ளியைச் சேர்ந்த டீம் “ரெஸ்க்யூ ரேஞ்சர்ஸ்”-க்கும் வழங்கப்பட்டது. சமூக நன்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபையின் உறுதிப்பாட்டை இன்றைய நிகழ்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டின. பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம், டபிள்யுடிஎஸ்ஏ-2024 முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதுமைகளுக்கு தொடர்ந்து வழி வகுக்கிறது.