Friday, December 05 2025 | 08:02:40 PM
Breaking News

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்

Connect us on:

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றின் ஆதரவுடன், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம், தெலங்கானா, திரிபுரா ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களின் 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அளவில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்ட 11 சேமிப்புக் கிடங்கில், 3 சேமிப்புக் கிடங்குகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றன.  உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள மாநில / மத்திய முகமைகளால் 3 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த முன்னோடித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் கிடங்குகள் கட்டுவதற்காக 21.11.2024 வரை நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கூடுதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் விற்பனை உள்கட்டமைப்பு திட்டம் போன்ற மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு மானியங்கள் மற்றும் வட்டி மானியங்கள் வழங்கப்படுகின்றன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …