Sunday, January 18 2026 | 04:55:39 AM
Breaking News

பிரதமரின் கிசான் மான் தன் திட்டத்தின் பயனாளிகள் தமிழ்நாட்டில் 1,10,582 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்

Connect us on:

பிரதமரின் கிசான் மான் தன்  திட்டம் (பி.எம்.கே.எம்.ஒய்), ஒரு மத்திய துறை திட்டமாகும், இது 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும், இது 60 வயதை எட்டும்போது குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ .3000- உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வயதான காலத்தில் சமூகப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் சேரும் வயதைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை பங்களிப்புத் தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசும் விவசாயிகளின் ஓய்வூதியக் கணக்கில் அதற்கு இணையான பங்களிப்பை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், 60 வயதை எட்டியவுடன் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) இந்தத் திட்டத்தின் ஓய்வூதிய நிதி மேலாளராக உள்ளது.

இந்தத் திட்டம் 2019-20 நிதியாண்டில் தொடங்கப்பட்டது. 25.11.2024 நிலவரப்படி, 24.66 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1,10,582 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …