Monday, December 15 2025 | 09:38:36 AM
Breaking News

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் 7-வது பதிப்பு 2024 டிசம்பர் 11-ம் தேதி தொடங்குகிறது

Connect us on:

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்  7-வது பதிப்பு ஒரே நேரத்தில் 2024 டிசம்பர் 11-ம் தேதி நாடு முழுவதும் 51 மையங்களில் தொடங்குகிறது.  மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்த நிகழ்ச்சியை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்  என்பது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மாணவர் குழுக்கள், 17 கருப்பொருள்களில் ஏதேனும் ஒன்றில் அவர்களது கண்டுபிடிப்பு அல்லது யோசனைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் அமையும்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்  நிகழ்ச்சியில், 54 அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறைகள் 250-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. இதில் 86000-க்கும் அதிகமான  அணிகள்கல்விநிலைய அளவில் பங்கேற்று இருந்தன. இதில் இருந்து சுமார் 49,000 மாணவர் குழுக்கள் தேசிய அளவிலான சுற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பல்வேறு அமைச்சகங்கள் / அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாணவர்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆகியோரிடையே வெளிப்படையான கலந்துரையாடலுக்கான ஒரு தளமாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

சுகாதாரம், விநியோகச் சங்கிலித் தொடர், தளவாடங்கள், நவீன தொழில்நுட்பங்கள், பாரம்பரியம், கலாச்சாரம், நிலைத்தன்மை, கல்வி, திறன் மேம்பாடு, நீர், விவசாயம், உணவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பேரிடர் மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும்.

About Matribhumi Samachar

Check Also

ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று (14.12.2025) யூத பண்டிகையான ஹனுக்காவின் முதல் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரமான இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ள பிரதமர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான உலகளாவிய போராட்டத்தை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “யூத பண்டிகையான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடிய மக்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா நிற்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.”