Monday, December 08 2025 | 10:27:52 PM
Breaking News

ஜெவர் விமான நிலையத்தில் முதல் சோதனை விமானம் தரையிறங்குவதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மேற்பார்வையிட்டார்

Connect us on:

நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் சோதனை விமானம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இது செயல்பாட்டு தயார்நிலையை நோக்கிய பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு, கவுதம் புத்த நகர் மக்களவை உறுப்பினர் டாக்டர் மகேஷ் சர்மா மற்றும் ஜெவர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. திரேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இண்டிகோவால் இயக்கப்படும் இந்த விமானம் பிற்பகலில் தரையிறங்கியது.  விமானத்தின் மீது நீரை பீய்ச்சியடித்து, பெரும் கைத்தட்டலுடன் அங்கிருந்தவர்கள் விமானத்தை வரவேற்றனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திருமதி வும்லுன்மாங் வால்ணம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் விபின் குமார், உத்தரப்பிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் திரு எஸ் பி கோயல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சோதனை விமானம் விமான நிலையத்தின் அணுகுமுறை மற்றும் புறப்படும் நடைமுறைகளை உறுதிப்படுத்தியது. வழிசெலுத்தல் உதவிகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் துல்லியத்தை உறுதி செய்தது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த குழுவின் முயற்சிகளைப் பாராட்டியதோடு, ஜெவர் விமான நிலையம் இந்தியாவில் விமானப் பயணம் மற்றும் பிராந்திய இணைப்பை மாற்றியமைக்க தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார். 2025-ம் ஆண்டில் ஆண்டுதோறும் 12 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட முனையத்துடன் திறக்கப்படும் விமான நிலையம், அதன் வடிவமைப்பு, கைவினைத்திறன் மற்றும் பயணிகள் சேவைகள் மூலம் உத்தரபிரதேசத்தின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் அடையாளத்தை பிரதிபலிக்கும் போது உலகத் தரம் வாய்ந்த வசதியாக செயல்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.