Thursday, December 11 2025 | 11:30:15 PM
Breaking News

திரிபுராவின் புளித்த மூங்கில் தண்டு உடல் பருமன் எதிர்ப்பு பண்பைக் கொண்டுள்ளது

Connect us on:

திரிபுராவின் புளிக்கவைக்கப்பட்ட மூங்கில் தண்டு சாறு ‘மெலி-அமிலே’ என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனுக்கு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. உடல் எடை மேலாண்மை மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு இது ஏற்றதாக உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

நொதித்தல் நுட்பங்கள் மனித நாகரிகத்தில் பழமையானவை. அவை தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளன. முக்கியமாக உணவைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்கவும், சுவை மற்றும் வாசனையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல், கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் சமுதாயத்தின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றைப் பொறுத்து, தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் வேறுபடுகின்றன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்  தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தைச்  சேர்ந்த பேராசிரியர் மொஜிபுர் ஆர்.கான் தலைமையிலான குழுவினர் வடகிழக்கு பிராந்தியத்தின் பல்வேறு வகையான புளிக்கவைக்கப்பட்ட  மூங்கில் தளிர்களின் உடல் பருமன் எதிர்ப்பு விளைவுகளை ஆராய்ந்தனர்.

இன் விட்ரோ செல் கல்ச்சர் ஆய்வுகளின் அடிப்படையில், திரிபுராவின் புளிக்கவைக்கப்பட்ட மூங்கில் தண்டு வகை, ‘மெலி-அமிலே’ என்று அழைக்கப்படுகிறது.  இது செல்லுக்குள் இருக்கும் கொழுப்பு திரட்சியைக் குறைக்கும் என்பதை குழு கவனித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்புகள் புளிக்கவைக்கப்பட்ட மூங்கில் தண்டு சாறு வெள்ளை அடிபோசைட்டுகளில் ஆற்றல் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் உடல் பருமன் எதிர்ப்புத் தன்மைகளை உறுதிசெய்கிறது என்று கூறுகின்றன. இந்த ஆய்வு சமீபத்தில்  ‘ஃபுட் ஃப்ரண்டையர்ஸ் ‘ இதழில் வெளியிடப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.