Saturday, January 17 2026 | 08:41:20 AM
Breaking News

உண்டு உறைவிடக் கல்வித் திட்டம்

Connect us on:

குறிப்பிட்ட பகுதிகளில் மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உண்டு உறைவிடக் கல்வித் திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது:

முதலாவது ஆண்டு தோறும் 3,000 திறன் வாய்ந்த  ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச்“ சேர்ந்த மாணவர்கள் மத்திய இடைநிலை  கல்வி வாரியம் அல்லது மாநில கல்வி வாரியங்களால் இணைக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தேர்வு முகமை  நடத்தும் நுழைவுத் தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12-ம் வகுப்பு வரை அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இரண்டாவதாக ஆதிதிராவிட மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள், தொடக்க, இடைநிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் பயன்முறை – முதல் வகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிட மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

வ. எண் ஆண்டுகள் தேர்வு செய்யப்பட்ட எஸ்.சி., மாணவர்கள்
1 2022-23 1,468
2 2023-24 2,543
3 2024-25 2,961
மொத்தம் 6,972

மத்திய அரசின் திட்டம் என்பதால், 2021-22 முதல் 2023-24-ம் ஆண்டு வரை மாநில வாரியாக நிதி ஒதுக்கீட்டிற்கான தரவுகள் மற்றும் நிதி விடுவிப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

(ரூ. கோடியில்)

வ. எண் ஆண்டுகள் திருத்திய மதிப்பீடு செலவு
1 2021-22 63.21 38.04
2 2022-23 89.00 51.12
3 2023-24 90.65 81.57
மொத்தம் 242.86 170.73

இத்திட்டத்தின் இரண்டு முறைகளின் கீழ் உள்ள மொத்த உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

முறை-1 246
முறை-2 51
மொத்தம் 297

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின் தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின், (தாள் -5) தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு …