Friday, January 02 2026 | 10:04:02 AM
Breaking News

ஹோமி பாபா இருக்கை உருவாக்கத் திட்டம்

Connect us on:

அணுசக்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் / பொறியாளர்கள் உள்ளிட்ட தலைசிறந்த நிபுணர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், அணுசக்தித் துறையில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான ஹோமி பாபா இருக்கை உருவாக்கத் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், விருது பெறும் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.2,00,000/- மதிப்பூதியம் வழங்கப்படும் (மதிப்பூதியம் மற்றும் ஓய்வூதியம் கடைசியாக பெற்ற ஊதியத்தை விட அதிகமாக இருந்தால், ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாக பெற்ற ஊதியத்திற்கு மதிப்பூதியம் கட்டுப்படுத்தப்படும்).

செயலக உதவி, தொலைபேசிக் கட்டணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற செலவினங்களை ஈடுகட்ட ஆண்டொன்றுக்கு ரூ.76,000/- வீதம் எதிர்பாரா செலவின மானியமாக வழங்கப்படுகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு …