Monday, December 08 2025 | 07:47:02 PM
Breaking News

நாடாளுமன்ற கேள்வி: பாலசோரில் டாப்ளர் ரேடார் நிலையம்

Connect us on:

டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நெட்வொர்க்கானது முக்கியமாக இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையைக் கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரை சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை கணிப்பதற்காக இந்தக் கட்டமைப்பு வானிலை முன்கணிப்பு மாதிரிகளில், குறிப்பாக நவ்காஸ்ட் மாதிரிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த டி.டபிள்யூ.ஆர்களின் உதவியுடன் தகுந்த முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

பாலசோரில் உள்ள டி.டபிள்யூ.ஆர் கட்டிடத்தை மாநில அரசு 2025 மார்ச் மாதத்திற்குள் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிடம் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, டி.டபிள்யூ.ஆர் பாலசோரின் நிறுவல் மற்றும் இயக்கம் நிறைவடையும்.

ஒடிசா மாநிலத்தில் (பாலசோர், சம்பல்பூர் மற்றும் புவனேஸ்வரில்) மூன்று டி.டபிள்யூ.ஆர் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 39 டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நிறுவப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டுக்குள் மேலும் 87 மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.