Saturday, December 06 2025 | 02:29:05 AM
Breaking News

நாடாளுமன்ற கேள்வி:- தேசிய பல்லுயிர் செயல்திட்டம்

Connect us on:

கொலம்பியாவின் காலியில் அண்மையில் நடைபெற்ற ஐநா பல்லுயிர் பெருக்க மாநாட்டின் போது இந்தியா தனது தேசிய பல்லுயிர் உத்தி, செயல் திட்டத்தை சமர்ப்பித்தது.

இந்தியாவின் தேசிய பல்லுயிர் உத்தி செயல் திட்டம் (NBSAP) பாதுகாப்பு, நிலையான பயன்பாடு, பயன் பகிர்வு ஆகியவற்றை விரிவாக கவனிக்கிறது, நிலப்பரப்பு, கடல் பகுதிகளைப் பாதுகாத்தல், சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல், மாசு கட்டுப்பாடு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

23 மத்திய அமைச்சகங்கள், பல தேசிய, மாநில அளவிலான அமைப்புகள், சமூகங்கள், பிற பங்குதாரர்களை உள்ளடக்கிய பரந்த ஆலோசனை செயல்முறையின் மூலம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …