Wednesday, December 24 2025 | 01:33:40 AM
Breaking News

15-வது நிதிக்குழு பரிந்துரை: ராஜஸ்தானுக்கு ரூ.614 கோடி, ஒடிசாவுக்கு ரூ.455 கோடி விடுவிப்பு

Connect us on:

ராஜஸ்தான், ஒடிசாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு (XV FC) பரிந்துரை ஒதுக்கீடுகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, 2024-25 நிதியாண்டின் இரண்டாவது தவணையான நிபந்தனையற்ற மானியங்களின் இரண்டாவது தவணை ரூ.560.63 கோடியும், 2024-25 நிதியாண்டிற்கான நிபந்தனையற்ற நிதியின் முதல் தவணையின் நிறுத்தி வைக்கப்பட்ட தொகையான ரூ.53.4123 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் 10,105 தகுதியான கிராம ஊராட்சிகள், 315 தகுதியான வட்டார ஊராட்சிகள், 20 மாவட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படும்.

ஒடிசாவில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2024-25 நிதியாண்டின் 2வது தவணையான நிபந்தனையற்ற மானியங்கள் ரூ.370.20 கோடியும், 2024-25 நிதியாண்டிற்கான நிபந்தனையற்ற மானியங்களின் முதல் தவணை ரூ.84.5086 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள 6794 கிராம பஞ்சாயத்துகள், 314 வட்டார பஞ்சாயத்துகள், 30 மாவட்ட ஊராட்சிகளுக்கு பொருந்தும்.

சம்பளம், பிற நிர்வாக செலவுகள் தவிர, அரசியலமைப்பின் பதினோராவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது (29) விஷயங்களின் கீழ், இடம் சார்ந்த தேவைகளுக்கு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (பி.ஆர்.ஐ) / ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் (ஆர்.எல்.பி) நிபந்தனையற்ற நிதி பயன்படுத்தப்படும். இதில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல், வீட்டுக் கழிவுகளின் மேலாண்மை – சுத்திகரிப்பு,  குடிநீர் வழங்குதல், மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி உள்ளிட்டவை அடங்கும்.

மத்திய அரசு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் – துப்புரவு துறை) மூலம் , ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநிலங்களுக்கு பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரையை விடுவிக்கப் பரிந்துரை செய்கிறது. பரிந்துரைக்கப்பட்ட செய்யப்பட்ட நிதி ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் வழங்கப்படுகிறது.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் பதினைந்தாவது நிதிக்குழு மானியங்கள் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிதி உதவி கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்துகிறது. பொறுப்புணர்வை மேம்படுத்தி கிராமங்களில் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

About Matribhumi Samachar

Check Also

இந்தூரில் நடைபெற்ற அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (21.12.2025) பங்கேற்றார். இந்த நிகழ்வை அடல் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. திருக்குறளில் இருந்து ஒரு குறளை நினைவுகூர்ந்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்றாலும், ஒருவரின் செயல்கள் மூலம் தனிச்சிறப்புகள் வெளிப்படுகின்றன என்று கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் சாதாரண மனிதர் அல்ல என்றும், லட்சியம், கொள்கைகள், மதிப்புகளில் உறுதியுடன் இருந்தார் என்றும் அவர் கூறினார். அரசியல்வாதி, நிர்வாகி, நாடாளுமன்றவாதி, கவிஞர், எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த மனிதராக அவர் திகழ்ந்தார் என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் பொது நிர்வாகத்தை திறம்பட மேற்கொண்டார் என்றும் அதனால்தான் வாஜ்பாயின் பிறந்தநாள் நல்லாட்சி தினமாக கடைபிடிப்படுகிறது என்றும் அவர் கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், அது நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தங்க நாற்கர சாலைத் திட்டம் …