Monday, December 08 2025 | 05:26:54 AM
Breaking News

ஆயுதப்படை கொடி நாள் சிஎஸ்ஆர் மாநாடு பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் புதுதில்லியில் நடைபெறுகிறது

Connect us on:

ஆயுதப்படை கொடி நாள், பெருநிறுவன சமூக பொறுப்புடைமை மாநாட்டின் ஆறாவது பதிப்பு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி  புதுதில்லியில் நடைபெறுகிறது. முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் கேந்திரிய சைனிக் வாரியம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்கள், விதவைகள், அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்களின் மறுவாழ்வு, மறுகுடியமர்வு மற்றும் நலன்களுக்காக  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கவும், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடைமைகளளின்கீழ் உதவிக்கான ஆதரவு திரட்டுவதும் இதன் நோக்கமாகும்.

ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கிய  முக்கிய பெரு நிறுவனங்களின்  பிரதிநிதிகளும்  பாராட்டப்படவுள்ளனர். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், முன்னாள் படைவீரர்களுக்கான நலத்துறைச் செயலாளர் டாக்டர் நிட்டன் சந்திரா, பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமைகளுக்கான பிரதிநிதிகள் முன்னாள் வீரர்கள், பாதுகாப்புப் படை பணியாளர்கள், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

About Matribhumi Samachar

Check Also

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 …