Monday, December 08 2025 | 05:01:01 AM
Breaking News

மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழு அமைப்பு

Connect us on:

2011-12 ஆம் ஆண்டு அடிப்படை என்பதில் இருந்து  2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக  மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

கீழ்க்கண்டவாறு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது:

1)    பேராசிரியர் ரமேஷ் சந்த், உறுப்பினர், நிதி ஆயோக்,  குழுத் தலைவர்

2)    கூடுதல் தலைமை இயக்குநர், கள நடவடிக்கைப் பிரிவு, புள்ளியியல் மற்றும்  திட்ட அமலாக்க அமைச்சகம்- உறுப்பினர்

3)    துணைத் தலைமை இயக்குனர், பொருளாதார புள்ளியியல் பிரிவு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் – உறுப்பினர்

4)    துணை தலைமை இயக்குநர், தேசிய கணக்குப் பிரிவு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் – உறுப்பினர்

5)    துணை தலைமை இயக்குநர், தொழில் கணக்கெடுப்பு பிரிவு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் – உறுப்பினர்

6)    பொருளாதார ஆலோசகர், பொருளாதார விவகாரங்கள் துறை, உறுப்பினர்

7)    ஆலோசகர், விலை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை – உறுப்பினர்

8)    மூத்த பொருளாதார ஆலோசகர், நுகர்வோர் விவகாரங்கள் துறை- உறுப்பினர்

9)    துணைத் தலைமை இயக்குநர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் – உறுப்பினர்

10)   தலைமை நிர்வாக அதிகாரி, சரக்கு மற்றும் சேவைகள் வரிக் கட்டமைப்பு – உறுப்பினர்

11)   இந்திய ரிசர்வ் வங்கி பிரதிநிதி – உறுப்பினர்

12)   டாக்டர் சவுமியா கந்தி கோஷ், தலைமைப் பொருளாதார நிபுணர், எஸ்பிஐ குழுமம் – உறுப்பினர்

13)   டாக்டர் சுர்ஜித் பல்லா, பொருளாதார நிபுணர் – உறுப்பினர் (அலுவல் சாராதவர்)

14)   டாக்டர் ஷமிகா ரவி, உறுப்பினர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு – உறுப்பினர் (அலுவல் சாராதவர்)

15)   டாக்டர் தர்மகீர்த்தி ஜோஷி, தலைமை பொருளாதார நிபுணர், கிரிசில் -உறுப்பினர் (அலுவல் சாராதவர்)

16)   திரு நிலேஷ் ஷா, நிர்வாக இயக்குனர், கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை -உறுப்பினர்  (அலுவல் சாராதவர்)

17)   இந்திரனில் சென்குப்தா, இணைத் தலைவர் மற்றும் பொருளாதார நிபுணர், பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் – உறுப்பினர் (அலுவல் சாராதவர்)

18)   துணைத் தலைமை இயக்குநர், தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (உறுப்பினர் செயலாளர்) – உறுப்பினர்

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.