Tuesday, July 28 2026 | 09:04:54 AM
Breaking News

அமிர்த பூந்தோட்டத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

Connect us on:

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 1, 2025) அமிர்த பூந்தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்தத் தோட்டம் பிப்ரவரி 2 முதல் மார்ச் 30 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும்.

பராமரிப்பு நாட்களாகக் கருதப்படும் திங்கட்கிழமைகளைத் தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் பூந்தோட்டத்தைப் பார்வையிடலாம். பிப்ரவரி 5-ம் தேதி (தில்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு காரணமாக), பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் (குடியரசுத்தலைவர் மாளிகையில் பார்வையாளர்கள் மாநாடு காரணமாக) மற்றும் மார்ச் 14-ம் தேதி (ஹோலி காரணமாக) தோட்டம் மூடப்படும்.

மார்ச் 26 – ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், மார்ச் 27-ந் தேதி பாதுகாப்பு, துணை ராணுவம் மற்றும் காவல் படையினருக்கும், மார்ச் 28 – ந் தேதி பெண்கள் மற்றும் பழங்குடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், மார்ச் 29 – ந் தேதி மூத்த குடிமக்களுக்கும் பிரத்யேகமாக தோட்டம் திறந்திருக்கும்.

பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

About Matribhumi Samachar

Check Also

மேற்கு வங்க மாநில உதய தினம் 2026: வரலாறும் பிரதமர் நரேந்திர மோடியின் நெகிழ்ச்சியான வாழ்த்துகளும்!

இந்தியாவின் கலாச்சாரம், கலை மற்றும் தேசிய உணர்வின் தொட்டிலாக விளங்கும் மேற்கு வங்க மாநிலம், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தோற்ற …