Tuesday, June 16 2026 | 04:22:09 AM
Breaking News

அமிர்த பூந்தோட்டத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

Connect us on:

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 1, 2025) அமிர்த பூந்தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்தத் தோட்டம் பிப்ரவரி 2 முதல் மார்ச் 30 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும்.

பராமரிப்பு நாட்களாகக் கருதப்படும் திங்கட்கிழமைகளைத் தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் பூந்தோட்டத்தைப் பார்வையிடலாம். பிப்ரவரி 5-ம் தேதி (தில்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு காரணமாக), பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் (குடியரசுத்தலைவர் மாளிகையில் பார்வையாளர்கள் மாநாடு காரணமாக) மற்றும் மார்ச் 14-ம் தேதி (ஹோலி காரணமாக) தோட்டம் மூடப்படும்.

மார்ச் 26 – ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், மார்ச் 27-ந் தேதி பாதுகாப்பு, துணை ராணுவம் மற்றும் காவல் படையினருக்கும், மார்ச் 28 – ந் தேதி பெண்கள் மற்றும் பழங்குடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், மார்ச் 29 – ந் தேதி மூத்த குடிமக்களுக்கும் பிரத்யேகமாக தோட்டம் திறந்திருக்கும்.

பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

About Matribhumi Samachar

Check Also

சென்னையின் ஆதம்பாக்கத்தில் சிஹ்சி ஃபார்மசி, ஐந்தாவது கிளை ‘மினி’ வடிவில் தொடக்கம்

சென்னை, 20 மே 2026 ஹெல்த்வாட்ச் டெலிடயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான சிஹ்சி ஃபார்மசி, சென்னையின் ஆதம்பாக்கம் பகுதியில் புதன்கிழமையன்று(மே …