Monday, December 08 2025 | 06:00:06 AM
Breaking News

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) 67-வது நிறுவன தினத்தை போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொண்டாடுகிறது

Connect us on:

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் 67-வது  நிறுவன தினத்தை போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(சி.வி.ஆர்.டி.இ )   இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி) ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கொண்டாடப்பட்டது. டிஆர்டிஓ ஆர் & டி செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், புது தில்லியில் உள்ள எஸ் கோத்தாரி அரங்கத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். மேலும் இந்த முழு நிகழ்ச்சியும் சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் அர்ஜுன் அரங்கத்தில், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. டி.ஆர்.டி.ஓ அமைப்பின் தலைவர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டிடி ஆர் & டி அமைப்பின் செயலாளர் 2024-ம் ஆண்டில் அடைந்த முக்கிய சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் நாட்டின் எதிர்கால சவால்களை சமாளிக்கவும், பிரதமரின் “தற்சார்பு இந்தியா” தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் வகையிலும், தனியார் தொழில் துறையினருடன் இணைந்து முக்கிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் டிஆர்டிஓ கவனம் செலுத்த வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார்.

டிஆர் டிஓ  அமைப்பின் செயலாளர்   உரையாற்றிய பிறகு, சி.வி.ஆர்.டி.இ.யின் சிறந்த விஞ்ஞானியும், இயக்குநருமான திரு ஜே.ராஜேஷ்குமார், மூத்த விஞ்ஞானிகள் / அதிகாரிகளுடன் அர்ஜுன் அரங்கத்தில் எல்.டி (ஜோராவார்)-ன் ஸ்கேல் டவுன் மாதிரியை வெளியிட்டார்.  சி.வி.ஆர்.டி.இ இயக்குநர் ஆற்றிய தலைமை உரையில், அடுத்த 10 ஆண்டுகளில் சி.வி.ஆர்.டி.இ-ன் செயல்பாடுகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார். ஏ.எஃப்.வி.களின் அமைப்புகள் / துணை அமைப்புகள் / கூறுகளின் உள்நாட்டுமயமாக்கலில் வளர்ச்சியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாலைவனப்பகுதிகள் உயரமான மலைப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்ட குழு உறுப்பினர்களையும் அவர் பாராட்டினார்.

சி.வி.ஆர்.டி.இ விழாக்குழு மற்றும் 22-வது பணிக்குழு சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

     

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”