Monday, December 08 2025 | 04:44:17 AM
Breaking News

ஜனவரி 6 ஆம் தேதி பிரதமர் பல ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

Connect us on:

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு காணொலி  மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிராந்தியத்தில் இணைப்பை மேலும் அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய டெர்மினல் ஸ்டேஷனை திறந்து வைப்பதோடு, கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.

பதான்கோட் – ஜம்மு – உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா, போக்பூர் சிர்வால் – பதான்கோட், படாலா – பதான்கோட் மற்றும் பதான்கோட் முதல் ஜோகிந்தர் நகர் வரையிலான 742.1 கிமீ நீளமுள்ள ஜம்மு ரயில்வே கோட்டத்தை உருவாக்குவது, ஜம்மு காஷ்மீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீண்ட பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும். மக்களின் அபிலாஷை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தும் இது, வேலை வாய்ப்புகளை உருவாக்கும், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலாவை மேம்படுத்துவதுடன்,  பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள சர்லபள்ளி புதிய முனைய நிலையம், சுமார் ரூ.413 கோடி செலவில் இரண்டாவது நுழைவு வசதியுடன் புதிய  முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முனையம், நல்ல பயணிகள் வசதிகளுடன், செகந்திராபாத், ஹைதராபாத் மற்றும் கச்சேகுடா போன்ற நகரத்தில் இருக்கும் பயிற்சி முனையங்களில் நெரிசலைக் குறைக்கும்.

கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில் பிரிவு கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இணைப்பை மேம்படுத்துவதோடு, பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”