Tuesday, December 09 2025 | 09:23:17 AM
Breaking News

ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய வழித்தடத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது

Connect us on:

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் ‘அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று 2.0’ பிரச்சாரத்தை நினைவுகூரும் விதமாகவும் ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய வழித்தடத்தில் சுமார் 17,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஒரு இயக்கத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய சாலையில் உள்ள யமுனா விரைவுச்சாலை சந்திப்புப் பகுதியில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் திரு நிதின் கட்கரி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  இணை அமைச்சர் திரு அஜய் தாம்தா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், மற்றும் உயர்  அதிகாரிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த தகவல எடுத்துரைக்கும் வகையில் பள்ளி மாணவர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, “பெருமளவிலான மாசு சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வருகிறது என்றும், இதைக் குறைப்பது நமது முதன்மையான பொறுப்பு என்றும் தெரிவித்தார். எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும், பெரிய அளவிலான தோட்டக்கலை இயக்கங்களை மேற்கொள்வதும் மிகவும் பயனுள்ள தீர்வுகள் என்று கூறிய அவர், மேலும் நாம் இரண்டையும் தீவிரமாகப் பின்பற்றுகிறோம் என்று தெரிவித்தார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக, சாலை கட்டுமானத்தில் கழிவுகளை திறம்பட பயன்படுத்துகிறோம் என்றும், மேலும் சாலை கட்டுமானத்தில் சுமார் 80 லட்சம் டன் கழிவுகளைப் பயன்படுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார். நமது நெடுஞ்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நீர் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.  ‘அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று’ என்பது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு மிகவும் உன்னதமான முயற்சியாகும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 5 கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை தாம் வாழ்த்துவதாகவும் திரு நிதின் கட்கரி கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.