Monday, December 08 2025 | 01:58:38 PM
Breaking News

ஏரோ இந்தியா 2025-ஐ முன்னிட்டு புதுதில்லியில் தூதர்களின் வட்டமேஜை கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார்

Connect us on:

ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோட்டமாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை (ஜனவரி 10)  புதுதில்லியில் வெளிநாட்டு தூதர்களின் வட்டமேஜை கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக 150-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா 2025-ன் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படும் , மேலும் அவர்களின் மிக மூத்த தலைவருக்கு பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படும். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

ஆசியாவின் மிகப்பெரிய ஏரோ ஷோவான ஏரோ இந்தியாவின் 15- வது பதிப்பு கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 2025 பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெற உள்ளது . ஐந்து நாட்கள் நடைபெறும் இதில் தொடக்க நிகழ்வு, பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேஜை சந்திப்பு ,ஐடெக்ஸ் ஸ்டார்ட்-அப் நிகழ்வு, வியக்க வைக்கும் விமான சாகச நிகழ்ச்சிகள்,  இந்தியா பெவிலியன் மற்றும் விண்வெளி நிறுவனங்களின் வர்த்தக கண்காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய கண்காட்சி ஆகியன இடம் பெறும்.இதன் கருப்பொருள் “பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை”” என்பதாகும்.

ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் உலகின் முன்னணி தொழில்களிலிருந்து ஏராளமான கண்காட்சியாளர்களை ஏரோ இந்தியா ஈர்க்கிறது. இலக்கு பார்வையாளர்களுக்கு அவர்களின் திறன்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்த தொழில்துறைக்கு இது ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வு, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களை இணைக்கவும், எதிர்காலத்தை வடிவமைக்கவும் தொழில்துறை தலைவர்களுக்கு ஒரு தளமாகச் செயல்படுகிறது.

About Matribhumi Samachar

Check Also

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 …