Monday, December 08 2025 | 10:24:02 AM
Breaking News

நமாமி கங்கா இயக்கத்தின் கீழ் மகா கும்பமேளா 2025-க்காக சிறப்பு தூய்மை நடவடிக்கைகள்

Connect us on:

தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ், மகா கும்பமேளா  2025-க்காக ரூ.152.37 கோடி செலவில் சிறப்பு தூய்மை மேலாண்மை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சிகள் நவீன தொழில்நுட்பத்தை பாரம்பரிய நடைமுறைகளுடன் இணைத்து  சுத்தமான, நிலையான சூழலை உறுதி செய்கின்றன.

கங்கையின் தூய்மையைப் பராமரித்தல், பயனுள்ள கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களை உருவாக்குதல் ஆகியவை மகா கும்பமேளா 2025-ன் முன்னுரிமைகளாகும்.

செப்டிக் டேங்குகள் பொருத்தப்பட்ட 12,000 பிளாஸ்டிக் கழிப்பறைகள், உறிஞ்சும் குழிகளுடன் கூடிய 16,100 எஃகு கழிப்பறைகள் என கண்காட்சி மைதானம் முழுவதும் 28,000-க்கும் அதிகமான கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை தூய்மையை உறுதி செய்யும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கூடுதலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், பக்தர்களுக்கு வசதியான, சுகாதாரமான அனுபவத்தை உறுதி செய்வதற்காக 20,000 சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகா கும்பமேளா 2025 வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்கான ஒரு முன்மாதிரி எடுத்துக்காட்டாகும். கங்கையின் தூய்மையை பராமரிப்பது, நிலையான கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களை உருவாக்குவது ஆகியவற்றில் அரசின் முயற்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது. மஹா கும்பமேளா 2025க்கான இந்த தூய்மை முயற்சி தற்போதைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினருக்கும் ஊக்கமளிக்கும்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.