Monday, December 08 2025 | 11:22:53 AM
Breaking News

சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை நான ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: பிரதமர்

Connect us on:

சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக தாம் ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட சுரங்கப்பாதை திறப்புவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி எழுதியிருப்பதாவது:

“ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க்கில் சுரங்கப்பாதை திறப்பு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கான நன்மைகளை நீங்கள் சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

மேலும், வான்வழி படங்கள் மற்றும் வீடியோக்களை ரசித்தேன்!”

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.