Saturday, September 12 2026 | 11:28:20 AM
Breaking News

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

Connect us on:

புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் நலன் அலுவலகம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து, “வளர்ச்சியடைந்த பாரத இளைஞர்கள் இணைப்பு” மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம் 2.0-இன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வை புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு முதலாவது மரக்கன்றை நட்டுத் தொடங்கிவைத்தார். மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், கொய்யா, நெல்லிக்காய், நீலச்செடி போன்ற 65-க்கும் அதிக வகையிலான மரக்கன்றுகள் நடப்பட்டன.

 

இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, மரங்கள் கரியமில வாயுவை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்தி, மாசு இல்லாமல் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் சுவாசிக்க ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன என்றார். மரங்களின் நிழல் வெளிப்புறங்களிலும் கட்டிடங்களின் சுற்றிலும் வெப்பத்தைக் குறைப்பதன் மூலம் வெப்பத் தாக்கத்தை தணித்து செயற்கை குளிரூட்டல் தேவையை குறைப்பதிலும் உதவுகிறது என்றார். பறவைகள், பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களுக்கு  இயற்கை வாழிடமாக அமைந்து, பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவிசெய்து, உள்ளூர் சூழல் அமைப்பைச் செழிக்கச் செய்கிறது என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும், பசுமை வளாகத்தை உருவாக்கும் சமுதாய பங்கேற்பையும் ஊக்குவிக்கும் பல்கலைக்கழகத்தின் தொடர் முயற்சிகளில் இந்த ஏற்பாடு ஒரு முக்கிய பகுதியாகும்.

About Matribhumi Samachar

Check Also

அரியலூர் பள்ளி மாணவர்களுக்காக CSIR நடத்திய ‘ஜிக்யாசா அடல்’ இருநாள் அறிவியல் பயிலரங்கு: நேரடி செய்முறைப் பயிற்சிகள் அசத்தல்!

தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், “ஜிக்யாசா அடல்” …