Sunday, September 06 2026 | 05:29:20 PM
Breaking News

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி: புதுவைப் பல்கலைக்கழகத்தில் தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி

Connect us on:

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மக்களிடையே தேசபக்தி உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுவைப் பல்கலைக்கழகம்  2025 ஆகஸ்ட் 13 அன்று தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி நிகழ்வை நடத்தியது. மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள்  என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 

கையில் தேசியக் கொடி ஏந்தி, ஒற்றுமை, நேர்மை மற்றும் மக்களின் ஒட்டுமொத்த வலிமையை குறிக்கும்  வகையில் இந்த மனிதச் சங்கிலி அமைந்தது.

இந்நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு தேசியச் சின்னங்களின் முக்கியத்துவத்தையும், மக்கள் பற்றிய சிந்தனையை வளர்ப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பையும் வலியுறுத்தினார். சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகிய இலட்சியங்களை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு இளைஞர்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் அரசியல் சாசன கொள்கைகளை மதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக்கபூர்வ பங்களிப்பு செய்வதற்கு பங்கேற்பாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

அரியலூர் பள்ளி மாணவர்களுக்காக CSIR நடத்திய ‘ஜிக்யாசா அடல்’ இருநாள் அறிவியல் பயிலரங்கு: நேரடி செய்முறைப் பயிற்சிகள் அசத்தல்!

தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், “ஜிக்யாசா அடல்” …