Saturday, December 06 2025 | 10:59:39 PM
Breaking News

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், உலகளாவிய சிறந்த கல்வி இந்தியாவில் குறைந்த செலவில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது: மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Connect us on:

புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்வியை சர்வதேசமயமாக்குவதன் இலக்குகளை அடைவதில் கல்வி அமைச்சகம் ஒரு பெரிய நடவடிக்கையாக மும்பையில் ‘சர்வதேச கல்வி நகரத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவை ஒரு உலகளாவிய கல்வி மையமாக, குறைந்த செலவில் உயர்தரக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். இந்த முயற்சியின் மூலம், இந்தியாவை உலகளாவிய அறிவு மையமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். சிறந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள், இங்கு தங்களது வளாகங்களை நிறுவ இந்தியா ஊக்குவித்து வருகிறது என அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகளவில் விரிவுபடுத்த இது அதிகாரம் அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி, கருத்துக்கள், திறமை, நம்பிக்கை ஆகியவற்றின் வளர்ந்து வரும் இருவழி இயக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். இந்தியா உலகளாவிய கல்வி சுற்றுச்சூழல் அமைப்பில் பங்கேற்பது மட்டுமல்லாமல் இந்தியா அதை வடிவமைக்கிறது என அவர் கூறினார்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மும்பை/நவி மும்பையில் தங்கள் இருப்பை நிலைநிறுத்துவது இதுவே முதல் முறை, மேலும் சில பல்கலைக்கழகங்கள் UGC (S) இன் கீழ் நவி மும்பையில் வரவிருக்கும் கல்வி நகரத்தில் வளாகங்களை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளின் 5 பல்கலைக்கழகங்கள் மும்பையில் வளாகங்களை நிறுவுவதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவில் இந்தப் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவுவது மாணவர்களுக்கு நன்மை பயக்கும்.

உயர்கல்வித் துறையின் செயலாளர் மற்றும் யுஜிசி-யின் தலைவர் டாக்டர் வினீத் ஜோஷி, தமது உரையில், கல்வியின் சர்வதேசமயமாக்கலை உறுதி செய்வதிலும், இந்தியாவின் பரந்த, ஆற்றல்மிக்க திறமையை வெளிப்படுத்துவதிலும் கல்வி அமைச்சகம் மற்றும் யுஜிசி-யின் பங்கை எடுத்துரைத்தார்.

மத்திய கல்வி அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகம், மகாராஷ்டிரா அரசு, பல்கலைக்கழக மானிய குழு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும், தூதரகங்களின் பிரமுகர்களும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களை அனுமதிக்கும் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

About Matribhumi Samachar

Check Also

திறமையை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விளக்கினார்

நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம்  மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், திறமையான மனங்களை  ஊக்குவிப்பது, அவர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் அவர்களின் திறனை அங்கீகரித்து மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதை விட ஒரு பல்கலைக்கழகத்தால் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்க முடியாது என்று கூறினார். கிட்டத்தட்ட 29,000 பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அமைச்சர், மாணவர்கள் மற்றும் விருது பெற்றவர்களின் சாதனைகள் விழாவின் உண்மையான கவனமாக அமைகிறது என்று கூறினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் பரந்த அளவிலான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். மாணவர்களில் பாதி பேர் இளம் பெண்கள்  என்பதில் அவர் …