Tuesday, December 09 2025 | 09:28:41 AM
Breaking News

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ. 241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

Connect us on:

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ .241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திரு அமித் ஷா, குஜராத் முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை சவால்களை எதிர்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். குஜராத்தில் நிலத்தடி நீர் ஒரு காலத்தில் 1,200 அடி ஆழத்தில் மட்டுமே கிடைத்தது, ஆனால், நர்மதா திட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா உட்பட குஜராத் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. முதலமைச்சராக பணியாற்றிய திரு நரேந்திர மோடியின் முயற்சிகளால் இது சாத்தியமானது என்று திரு ஷா குறிப்பிட்டார். நர்மதா திட்டத்தைஅனைத்து தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக அமல்படுத்தியதில்  திரு. மோடி வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்தார் . திரு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, நர்மதா நதியின் நீர் மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைத்தது என்று திரு ஷா மேலும் கூறினார். பரூச்சிலிருந்து காவ்டா வரை கால்வாய் அமைப்பதை அவர் உறுதி செய்தார். குஜராத் முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட குளங்களை நிரப்புவது, மழைநீரைச் சேமிப்பது, சவுராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது போன்ற முன்முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

திரு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில், கடனாவிலிருந்து தீசாவுக்கு நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக முயற்சிகளை முன்னெடுத்தார் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். நர்மதா நதி நீரை சுமார் 9,000 குளங்களில் நிரப்புவதற்கு  திரு மோடி எவ்வாறு உதவினார் என்பதையும், ஆண்டு முழுவதும் அதன் நீர் ஓட்டத்தை பராமரிக்க சபர்மதி ஆற்றின் குறுக்கே 14 அணைகளைக் கட்டியதையும் அவர் எடுத்துரைத்தார். பிரதமர் மோடியின் முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், வடக்கு குஜராத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்று திரு ஷா கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.