மாபெரும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுவான தரநிலைகளுடன் உலகளாவிய பருவநிலை நிதியை மறுசீரமைக்க இந்தியாவின் வலுவான வாய்ப்பை எடுத்துரைக்கும் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பருவநிலை நிதிசார்ந்த பொருளாதாரம் குறித்த இந்தியாவின் முன்மொழிவு, அதிகரித்து வரும் உள்நாட்டு பசுமை நிதி ஆகியவற்றுக்கு, எதிர்காலத்திற்கான உலகளாவிய கட்டமைப்புக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கும், நடைமுறை சார்ந்த தலைமைத்துவத்தை உதாரணமாக இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
மத்திய அமைச்சரால் எழுதப்பட்ட கட்டுரையை வரவேற்று திரு மோடி கூறியிருப்பதாவது:
“மாபெரும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுவான தரநிலைகளுடன் உலகளாவிய பருவநிலை நிதியை மறுசீரமைக்க இந்தியாவின் வலுவான வாய்ப்பை மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எடுத்துரைத்துள்ளார்.
பருவநிலை நிதிசார்ந்த பொருளாதாரம் குறித்த இந்தியாவின் முன்மொழிவு, அதிகரித்து வரும் உள்நாட்டு பசுமை நிதி ஆகியவற்றுக்கு, எதிர்காலத்திற்கான உலகளாவிய கட்டமைப்புக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கும், நடைமுறை சார்ந்த தலைமைத்துவத்தை உதாரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.”
Matribhumi Samachar Tamil

