Monday, December 08 2025 | 09:22:34 AM
Breaking News

முன்னோட்டக் காலகட்டத்தின் இரண்டாவது சுற்று தொடங்கியுள்ள நிலையில் பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Connect us on:

முன்னோட்டக் காலகட்டத்தின் இரண்டாவது சுற்று தொடங்கியுள்ள நிலையில் பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதலாவது சுற்றில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இரண்டாவது சுற்றில் நாட்டின் 730-க்கும் அதிகமான மாவட்டங்களில் உள்ள முதன்மை நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான உள்ளகப் பயிற்சி இடங்கள் கிடைக்கும்.

எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, வங்கி மற்றும் நிதிச்சேவைகள், சுற்றுப்பயணம், விருந்தோம்பல், மோட்டார் வாகனத் தொழிற்சாலை, உலோகங்கள் மற்றும் சுரங்கத் தொழில்கள், வெகு வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 300-க்கும் அதிகமான முதன்மை நிறுவனங்களும், மற்றவையும் இந்திய இளைஞர்கள் நேரடி அனுபவத்தையும், தொழில் நிபுணர்கள் உடனான வலைப்பின்னலையும்  வேலைவாய்ப்பைப்பெறுவதற்குத்  தகுதி மேம்பாட்டையும் தர முன்வந்துள்ளன.

2-வது சுற்றில் இந்த உள்ளகப் பயிற்சிகளுக்குத் தேவையான கல்வித்தகுதிகள் அடிப்படையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் போன்வற்றில் உள்ளகப் பயிற்சி குறித்து 70-க்கும் அதிகமான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. உள்ளகப் பயிற்சி இடங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். பல்வேறு தளங்கள் மூலம் தேசிய அளவில் டிஜிட்டல் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம் என்பது பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்திய இளைஞர்களின் திறனைப் பயன்படுத்த முதன்மை நிறுவனங்களின் 12 மாத நிதியுதவியுடன் உள்ளகப் பயிற்சி வழங்கப்படுகிறது. 21 முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் இதற்குத் தகுதி பெற்றவர்களாவர். ஒவ்வொரு உள்ளகப் பயிற்சியாளருக்கும் மாதாந்தர நிதியுதவியாக ரூ. 5 ஆயிரமும், ஒருமுறை நிதியுதவியாக ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் https://pminternship.mca.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.