Sunday, December 07 2025 | 01:21:04 AM
Breaking News

தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு:மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

Connect us on:

தமிழ்நாட்டில்  சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் திரு ஜி.செல்வம், திரு சி என் அண்ணாதுரை ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், ராமேஸ்வரம் தீவு, தஞ்சாவூர், தேவலா (நீலகிரி மாவட்டம்), மாமல்லபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

சுதேசி தரிசனம், சுதேசி தரிசனம் 2.0, பிரசாதம், மூலதன முதலீட்டுக்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஆன்மீகத் தலங்கள், பாரம்பரிய இடங்கள் போன்றவற்றில் சுற்றுலா உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இதன்படி, நிதியாண்டு 2024-25-ல் மாமல்லபுரத்தில் பாரம்பரிய பூங்காவான நந்தவன மேம்பாட்டுக்கு ரூ.99.67 கோடியும், தேவாலாவில் மலர் தோட்டத்திற்கு ரூ.70.23 கோடியும் ராமேஸ்வரம் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.20.01 கோடியும், 8 நவகிரக கோவில்கள் மேம்பாட்டுக்கு ரூ.40.94 கோடியும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் அலங்கார மின் விளக்கு அமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.11.47 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

2023-24-ம் நிதியாண்டில் மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோவில் மேம்பாட்டுக்கு ரூ.30.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம் – மண்பாடு – கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.73.13 கோடியும், காஞ்சிபுரம் மேம்பாட்டுக்கு ரூ.13.99 கோடியும், வேளாங்கண்ணி மேம்பாட்டுக்கு ரூ.4.86 கோடியும் 2016-17-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதாக திரு ஷெகாவத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு – தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில்  பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.  1,300- க்கும் …