Sunday, December 07 2025 | 01:52:52 PM
Breaking News

இந்திய பாதுகாப்புக் கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத் தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

Connect us on:

இந்திய பாதுகாப்பு கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத்தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குழு இன்று (2025 ஜனவரி 22) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது.

பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேகமடைந்துள்ள சூழலில் இந்த அதிகாரிகள் பணியில் இணைவதாகக் கூறினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, விரைவான தகவல் பரவல், மாறும் உலகளாவிய சூழல்கள் ஆகியவற்றை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சியிலும், அதை உலக அளவில் போட்டித்திறன் மிக்கதாக மாற்றுவதிலும் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். தங்கள் கடமைகளைச் செய்யும்போது மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை எப்போதும் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார். அதிகாரிகள் முடிவுகளை எடுக்கும்போது சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரின் தேவைகள், விருப்பங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு கேட்டுக்கொண்டார்.

இந்திய பாதுகாப்புக் கணக்கு சேவை அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், நமது நாட்டின் ஆயுதப் படைகளின் நிதி அம்சங்களை மேற்பார்வையிடுவதில் இந்த அதிகாரிகள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

இந்திய தொலைத்தொடர்பு பணி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், கடந்த 20 ஆண்டுகளாக மொபைல் தொலைபேசி, அதிவேக இணையதள கட்டமைப்புகளின் முன்னேற்றத்தால் தொலைத்தொடர்பு கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

About Matribhumi Samachar

Check Also

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான டாக்டர் அம்பேத்கரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் தேசியப் பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதிலும் டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பிலிருந்து நமது தலைமுறைகள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த  பாரதத்தைக் கட்டியெழுப்ப நாடு பாடுபடும் போது டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்கள் நாட்டின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துள்ளார்.  ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.”