Sunday, December 28 2025 | 05:44:50 AM
Breaking News

தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாக கொண்ட ஆளுகை மூலம் நிதி மேற்பார்வை செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்; மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

Connect us on:

தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை மூலம், நிதிசார் கண்காணிப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுச் செலவினங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகள், செயல்திறன் ஆகியவற்றை உறுதிசெய்வதன் மூலம், நிதிசார் ஒழுங்குமுறை பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக நடைமுறைகள் இருக்க வேண்டும் என்றும், நிதிசார் கண்காணிப்பு வழிமுறைகள் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இன்று மும்பையில் உள்ள மகாராஷ்டிரா விதான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாடாளுமன்றம் மற்றும் மாநில / யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் மதிப்பீட்டுக் குழுக்களின் தலைவர்களின் இரண்டு நாள் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசினார். இந்திய நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் 75 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் விழா மலரையும்  திரு பிர்லா வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் 75 ஆண்டுகள்  சாதனைகளைக் கொண்டாடுவதுடன் நிதிசார் ஒழுங்குமுறை, நிர்வாகத் திறன், முறையான சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில்  அதிகரித்து வரும் இந்தக் குழுவின் பங்களிப்பும் எடுத்துக்காட்டப்படும் என்று  அவர் குறிப்பிட்டார்.  பல தசாப்தங்களாக, பட்ஜெட் மதிப்பீடுகளை ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகளை மதிப்பிடுவது, அரசின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவது போன்றவை இக்குழுவின் முக்கிய பொறுப்புகளாகும் என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற செயலக மறுசீரமைப்பு, ரயில்வே மற்றும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுத்திறன், கங்கை நதி புனரமைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இந்தக் குழுவின் பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்தார். நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு வழங்கிய பரிந்துரைகளில் 90 முதல் 95 சதவீத பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

விரிவான விவாதங்கள், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள், நிர்வாக பொறுப்புணர்வை உறுதி செய்தல் ஆகியவற்றில் நாடாளுமன்றக் குழு திறம்பட செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அரசியல் எல்லைகளைக் கடந்து, ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஜனநாயக முறையில் மேற்கொள்வதற்கு இந்தக் குழுவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று திரு ஓம் பிர்லா கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமான புகார்களின் அடிப்படையில், 8 மாதங்களில் 45 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் முதன்மை முயற்சியான தேசிய நுகர்வோர் உதவி எண், நாடு முழுவதும் நுகர்வோர் குறைகளை திறம்பட, சரியான நேரத்தில் தீர்வு காண்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. 2025 ஏப்ரல் 25 முதல் டிசம்பர் 26 வரையிலான எட்டு மாத காலத்தில், இந்த உதவி எண், மூலம் 31 துறைகளில் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான 67,265 நுகர்வோர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 45 கோடி ரூபாய் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது . நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செயல்படும் இந்த உதவி எண்ணில் புகார் அளிக்கும்போது, சிக்கல்களை விரைவாகவும், இணக்கமாகவும் தீர்க்க முடிகிறது. நுகர்வோர் ஆணையங்களின் சுமையையும் குறைக்கிறது. கடந்த 8 மாதங்களில் மின் வணிகத் துறையில் அதிகபட்சமாக 39,965 குறைகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 32 கோடி ரூபாய் நுகர்வோருக்கு திரும்ப வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பயணம், சுற்றுலாத் துறையில் 4,050 குறைகள் பதிவு செய்யப்பட்டு 3.5 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், முக்கிய பெருநகரங்கள் முதல் தொலைதூர பகுதிகள் வரை, மின் வணிக பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள் அதிகம் பெறப்பட்டன. இது தேசிய நுகர்வோர் உதவி எண்ணின் நாடு தழுவிய செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் வழக்குத் தொடரும் முன் குறைகளைத் தீர்க்க தங்கள் குறைகளை 1915 என்ற கட்டணமில்லா எண் மூலம் 17 மொழிகளில் பதிவு செய்யலாம் . ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் வழிமுறையான இன்கிராம் தளம் மூலமாகவும் குறைகளைச் சமர்ப்பிக்கலாம். நுகர்வோர் உதவி தொடர்பான இணையதளம்: www.consumerhelpline.gov.in நுகர்வோர் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், பிரச்சனைகளுக்குச் சரியான நேரத்தில் தீர்வு காணவும் உதவி எண்ணை அதிக அளவில் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகாரங்கள் துறை கேட்டுக்கொள்கிறது.