Sunday, June 21 2026 | 02:35:19 AM
Breaking News

கிம்பர்லி செயல்முறையின் மதிப்புமிக்க தலைமைப் பொறுப்பை 2026 ஜனவரி 1 முதல் இந்தியா ஏற்கிறது

Connect us on:

கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக இந்தியா 2026 ஜனவரி 1 முதல் பொறுப்பேற்கிறது. கிம்பர்லி செயல்முறை என்பது பல்வேறு நாடுகளின் அரசுகள், சர்வதேச வைரத் தொழில் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு அமைப்பாகும். இது, ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானங்களில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, சட்டபூர்வமான அரசுகளை பலவீனப்படுத்தும் அமைப்பின் செயல்பாடுகளுக்கு நிதியுதவி அளிக்க கிளர்ச்சிக் குழுக்கள் அல்லது அவர்களின் கூட்டு அமைப்புக்களால்  பயன்படுத்தப்படும் பட்டை தீட்டப்படாத வைரங்கள் வர்த்தகப்  போட்டியை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2025 டிசம்பர் 25 முதல் கிம்பர்லி செயல்முறை அமைப்பின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்கும் இந்தியா, பின்னர் புத்தாண்டு முதல் தலைமைப் பொறுப்பை ஏற்கும். கிம்பர்லி செயல்முறை அமைப்பின் தலைமைப் பதவி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்த முடிவை வரவேற்றுள்ளார். சர்வதேச வர்த்தகத்தில் நேர்மை,  வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையை இது பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

ஐ.நா. தீர்மானத்தின்படி நிறுவப்பட்டுள்ள கிம்பர்லி செயல்முறை அமைப்பின் சான்றிதழ் திட்டம், 2003 ஜனவரி 1 அன்று செயல்பாட்டிற்கு வந்தது. அன்று முதல் வைரங்களின் வர்த்தகப் போட்டிகளைக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள வழிமுறையாக உள்ளது. கிம்பர்லி செயல்முறை அமைப்பில் தற்போது 60 நாடுகள் பிரதிநிதிகளாக  உள்ளனர். இதில் ஐரோப்பிய ஒன்றியம், அதன் உறுப்பு நாடுகள் தனிப்பட்ட பங்கேற்பாளராகக் கணக்கிடப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக, கிம்பர்லி செயல்முறை அமைப்பின் பங்கேற்பாளர்கள் உலகளவில் பட்டை தீட்டப்படாத வைரங்கள் வர்த்தகத்தில் 99 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளனர். இது இந்தத் துறையை நிர்வகிக்கும் மிக விரிவான சர்வதேச வழிமுறையாக அமைகிறது.

வைர உற்பத்தி மற்றும் வர்த்தகத்திற்கான உலகின் முன்னணி மையமாக மாறிவரும் புவிசார் அரசியல், நிலையான, பொறுப்பான மூலப்பொருட்கள் கொள்முதல் மீதான அதிகரித்து வரும் முக்கிய காலகட்டத்தில் இந்தியா தலைமைப் பொறுப்பேற்கிறது. தனது பதவிக்காலத்தில், இந்தியா நிர்வாகம் மற்றும் இணக்க நடைமுறைகளை  வலுப்படுத்துதல், டிஜிட்டல் சான்றிதழ் மற்றும் கண்டறியும் தன்மையை மேம்படுத்துதல், தரவு அடிப்படையிலான கண்காணிப்பு மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் போட்டி இல்லாத வகையில் வைரங்கள் மீது நுகர்வோர் நம்பிக்கையை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

2025-ல் துணைத் தலைவராகவும், 2026-ல் தலைவராகவும், இந்தியா அனைத்து உறுப்பு நாடுகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றி, கிம்பர்லி செயல்முறை அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த உதவிடும். விதிமுறைகள் அடிப்படையிலான இணக்க நடைமுறைகளை உறுதி செய்வதுடன், அதன் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தும்.

About Matribhumi Samachar

Check Also

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தை!

உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில் மிகப்பெரிய திருப்புமுனையாக, பிரான்சில் உள்ள எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, …