Monday, December 08 2025 | 12:36:59 PM
Breaking News

ராஷ்ட்ரிய கர்மயோகி ஜன் சேவா திட்டம்: தன்னலமற்ற சேவையை வளர்க்கிறது

Connect us on:

மத்திய சட்ட விவகாரங்கள் துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், ராஷ்ட்ரிய கர்மயோகி ஜன் சேவா திட்டத்தை புது தில்லி கேஜி மார்க்கில் உள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்தது. இந்த கலந்துரையாடல்  நிகழ்வு, மக்களை மையப்படுத்திய நிர்வாக அணுகுமுறையை வலியுறுத்தும் வகையில், கர்மயோகி வழியைக் கடைப்பிடிக்க, மத்திய அரசு ஊழியர்களை ஊக்குவிக்கவும், அறிவூட்டவும், வழிகாட்டவும் நோக்கமாக கொண்டிருந்தது. .

இந்தத் திட்டம் சேவை உணர்வு  மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.  கூடுதல் செயலாளர் டாக்டர் அஞ்சு ரதி ராணாவின் வழிகாட்டுதலின் கீழ்,  கலப்புப் பயிற்சியாகவும், சுயபரிசோதனையாகவும், பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், பொதுத் தேவைகளுக்குப் பதிலளிக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கும் இது ஊக்கமளிக்கிறது.

ஒவ்வொரு அமர்வும், 1.5 மணி நேரம் கொண்ட நான்கு தொகுதிகளாகக் கட்டமைக்கப்பட்டது, இந்தத் திட்டம் , விவாதங்கள், குழுப்பணி மூலம் கூட்டுச் சிக்கலைத் தீர்ப்பதை ஊக்குவித்தது. அதிகாரிகள் தங்கள் உள்ளார்ந்த திறனை நினைவுபடுத்தினர். ஒரு செயலூக்கமான அணுகுமுறையை பின்பற்ற தூண்டப்பட்டனர்.

பங்கேற்பாளர்கள் கர்மயோகி அணுகுமுறையின் நன்மைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர் – பொறுப்புடைமை மற்றும் பதிலளிக்கும் தன்மையுடன் சேவை மனப்பான்மையை உருவாக்குதல். குடிமக்களின் தேவைகள் மற்றும் அமைச்சகத்தின் நோக்கங்கள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்ய இந்த மனநிலையை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் கோரப்பட்டன. இந்த அமர்வு நடத்தை மாற்றம், நேர மேலாண்மை மற்றும் தீர்வு சார்ந்த பணி நெறிமுறைகளை தாக்க விளைவுகளை அடைவதற்கான திறவுகோலாக வலியுறுத்தியது.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”