Friday, January 02 2026 | 06:42:30 AM
Breaking News

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளக பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது

Connect us on:

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளகப்பயிற்சித் திட்டத்தை 2025 ஜனவரி 27 அன்று தொடங்கியது. மனித உரிமைகள், அது தொடர்பான சட்டங்கள் மற்றும் இந்தியாவில் அவற்றின் பயன்பாடு பற்றிய விரிவான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கல்வித் துறைகளைச் சேர்ந்த 80 இளங்கலை, முதுகலை மாணவர்கள் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான நிகழ்ச்சியில் பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி, மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் மனித உரிமைகளுக்கு மரியாதை அளிக்கும் வளமான பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இது நமது அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் பிரதிபலிக்கிறது.

மக்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்காக வாதிடுபவர்களாக மாறுவதற்கு பயிற்சியாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இந்த உள்ளகப்பயிற்சித் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். பயிற்சிபெறுபவர்கள்  நிபுணர்களிடமிருந்து நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மேலும் நியாயமான, சமத்துவமான சமுதாயத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

About Matribhumi Samachar

Check Also

பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ. 79,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுமத்தின் கூட்டத்தில், பாதுகாப்புப் படைகளின் பல்வேறு …