Friday, January 02 2026 | 06:57:28 AM
Breaking News

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பட்டி நகரில் நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டை ட்ராய் மேற்கொண்டது

Connect us on:

ஹிமாச்சல பிரதேசத்தின் பட்டி நகரில் 2025 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை  இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. தில்லியில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

நகர்ப்புற பகுதிகள், நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கிய பகுதிகள், பொதுப் போக்குவரத்து பகுதிகள் மற்றும் அதிவிரைவு முனையங்கள் போன்றவற்றில் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.

2025 நவம்பர் 11 முதல் 13 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 180 கிலோமீட்டர் நகர்ப்புற பகுதியும், 6 நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களும் அடங்கும்.

2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று சோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம், 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி ஆகியவற்றின் தொழில்நுட்ப செயல்பாடு குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இந்த சோதனைகளின் விரிவான அறிக்கை www.trai.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. விரிவான விவரங்களை அறிய தில்லி பிராந்திய அலுவலக ஆலோசகர் திரு விவேக் காரேயை [email protected] என்ற மின்னஞ்சலில் அல்லது +91-11-20907772 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

About Matribhumi Samachar

Check Also

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறைதீர்க்கும் பணிகளை விரைவுபடுத்த பயணிகளுக்கு உதவும் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையிலும், வழித்தட எண்ணிக்கையிலும் பெரிய உயர்வுக்கு வழிவகுத்தது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டு வந்தாலும், விமான தாமதங்கள், பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள், பொருள்கள் தொடர்பான சிக்கல்கள், நெரிசல், நீண்ட வரிசை, நெரிசல் மிகுந்த காலங்களில் போதுமான வசதிகள் இல்லாதது போன்ற தொடர்ச்சியான சவால்களையும் ஏற்படுத்தியது. பயணிகளை மையமாகக் கொண்ட இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த  பதில் செயல்முறை அவசியம். இந்த தேவைகளை உணர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தலைமையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், நிரந்தரமாக 24 மணி நேரமும் செயல்படும் பயணிகளுக்கான உதவி கட்டுப்பாட்டு அறையை நிறுவ முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளது. டிசம்பர் 03, 2025 முதல் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திரு சமீர் குமார் சின்ஹா, இந்த மையத்தை தினமும் நேரில் பார்வையிட்டு, செயல்பாடுகளை ஆய்வு செய்து, பயணிகளின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்கிறார்.  குறைகளைத் தீர்ப்பதில் வேகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.