Monday, December 15 2025 | 12:50:27 PM
Breaking News

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடைகள் தொடர்பான முக்கிய முன்முயற்சிகள்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

Connect us on:

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நேற்று (2025 ஜனவரி 13 -திங்கட்கிழமை) ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடை துறையில் தொடர்ச்சியான பயனுள்ள முக்கிய முன்முயற்சிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பிராந்தியத்தில் முக்கியமான ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு  பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மத்திய  கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய கால்நடை, பால்வளத் துறை இணையமைச்சர்கள் திரு எஸ்.பி.சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன் ஒடிசா முதலமைச்சர் திரு. மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் மயூர்பஞ்சில் கால்நடை திட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். நிகழ்வின் ஒரு பகுதியாக, பரிசு பால் திட்டமும் தொடங்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த முயற்சியை காணொலி முறையில் தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத் தலைவர், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றில் இதுபோன்ற திட்டங்களின் நேர்மறையான தாக்கத்தை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற முயற்சிகள் நாடு முழுவதும்  முன்மாதிரியாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொலைநோக்குக் கொள்கைகள், புதுமையான நடைமுறைகள் மூலம் பால்வளத் துறையைச் சிறப்பாக மாற்றியமைப்பதில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையின் முயற்சிகளை அவர் பாராட்டினார். பால் உற்பத்தியில் இந்தியாவின் தலைமையை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு எடுத்துரைத்தார்.

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், உள்நாட்டு மாட்டினங்களின் இன மேம்பாட்டையும் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள தேசிய கால்நடை இயக்கத்தின் வெற்றியை எடுத்துரைத்தார்.

ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, நிலையான கிராமப்புற வாழ்வாதாரத்தை வளர்ப்பதில் கால்நடைகளின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.  விவசாயிகளை மையமாகக் கொண்ட திட்டங்கள் மூலம் பால், கால்நடை துறைகளை முன்னேற்றுவதற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை அவர் விளக்கினார்.

About Matribhumi Samachar

Check Also

கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர சிலையை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார்

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அதானியில் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர  சிலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று (14.12.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது என அவர் கூறினார். இது வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல என்றும் இந்தியாவின் சுயமரியாதை, துணிச்சல் ஆகிய உணர்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு விழா என்றும் கூறினார். “ஜெய் பவானி, ஜெய் சிவாஜி” என்ற முழக்கம் இன்றும் கூட ஒவ்வொரு இந்தியரிடமும் அச்சமின்மை, தேசிய கடமை உணர்வைத் தூண்டி வருவதாக அவர் குறிப்பிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் அவர் நினைவு கூர்ந்தார். சிவாஜி மகாராஜின் வீரத்திற்கு பெலகாவி பகுதியும் அதானி நிலமும் ஒரு சாட்சியாக இருந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். பெலகாவி மண்ணில், வீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அழியாத சரித்திரம் நிலைப்பெற்றுள்ளது என்று அவர் கூறினார். சிவாஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டு நவீன இந்தியா முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிலை வருங்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.