Sunday, March 08 2026 | 07:20:37 AM
Breaking News

பாஷினி: பன்மொழிப் புத்தாக்கம் மூலம் மகா கும்பமேளாவில் மாற்றத்தை ஏற்படுத்துதல்

Connect us on:

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை யாத்ரிகர்கள் கூடும் மகா கும்பமேளா, இந்தியாவின் கலாச்சார, ஆன்மீக மரபுகளின் உச்சத்தை பிரதிபலிக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 2025-ல் நடத்தப்படும் இது, பல்வேறு மொழி பின்னணியைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்களை ஈர்க்கிறது. இதற்கு ஆதரவாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தடையற்ற தகவல் தொடர்பு மற்றும் அணுகலை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் புத்தாக்க முயற்சியான பாஷினியை பயன்படுத்துகிறது. 11 இந்திய மொழிகளில் அணுகலை வழங்குவதன் மூலம், இந்த நிகழ்வில் தகவல்கள் பகிரப்படும் மற்றும் தகவல் பெறப்படும் முறை மாற்றியமைக்கப்படும். இதற்கு பாஷினி தயாராக உள்ளது.

மகா கும்பமேளாவில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அளவு மற்றும் மொழிப் பன்முகத்தன்மை காரணமாக தனித்துவ தகவல் தொடர்பில் சவால்கள் எழுகின்றன. தனது மேம்பட்ட பன்மொழி திறன்கள் மூலம் இந்தச் சவால்களை பாஷினி எதிர்கொள்கிறது:

நிகழ்நேர தகவல் பரப்புதல்: அறிவிப்புகள், நிகழ்ச்சி அட்டவணைகள், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல்களை 11 இந்திய மொழிகளில் பெறுவதற்கு பாஷினி உதவுகிறது. யாத்ரிகர்கள், தங்கள் தாய்மொழியைப் பொருட்படுத்தாமல், நிகழ்வின் போது முக்கியமான தகவல்களை அணுக முடியும் என்பதை இது உறுதி செய்கிறது.

எளிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டி: மொழித் தடைகள் பெரும்பாலும் பெரிய கூட்டங்களில் வழிகாட்டுதலை சிக்கலாக்குகின்றன. பாஷினியின் பேச்சு-க்கு-உரை மற்றும் உரை-க்கு-பேச்சு கருவிகள், மொபைல் செயலிகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பன்மொழி சாட்போட், யாத்ரிகர்களுக்கு அவர்கள் விரும்பும் மொழியில் வழிகாட்டி, அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

அணுகக்கூடிய அவசர சேவைகள்: உதவி எண்கள், அவசர சேவைகளுக்கான பன்மொழி அணுகல் ஆகியவை பங்கேற்பாளர்கள் பாதுகாப்பான சூழலை பெற முடியும்  என்பதை உறுதி செய்கிறது. உத்தரப்பிரதேச காவல்துறையுடன் இணைந்து, 112-அவசர உதவி எண்களுடனான தகவல்தொடர்புகளுக்கு பாஷினி உதவுகிறது.

மின்-ஆளுமையை செயல்படுத்துதல்: பாஷினியின் உதவியுடன், ஒழுங்குபடுத்துதல், வழிகாட்டுதல்கள் மற்றும் பொது சேவை அறிவிப்புகளை பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க முடியும். இது மென்மையான ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது.

காணாமல் போவதும் கண்டறிவதும்: பாஷினியின் ‘டிஜிட்டல் இழப்பு & தீர்வைக் கண்டறிதல்’ ஒரு முக்கிய அம்சமாகும். இது பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் குரல் உள்ளீடுகளைப் பயன்படுத்தி இழந்த அல்லது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பதிவு செய்ய உதவுகிறது. நிகழ்நேர உரை மற்றும் குரல் மொழிபெயர்ப்புகள் தொடர்புகளை எளிதாக்குகின்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ‘கும்ப் சஹாயக்’ என்பது செயற்கை நுண்ணறிவால் இயங்கும், பன்மொழி, சாட்போட் ஆகும். இது மஹா கும்பமேளா 2025-ன் போது லட்சக் கணக்கான பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.   யாத்ரிகர்களின் தகவல் மற்றும் வழிகாட்டுதல் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் புனித யாத்திரை அனுபவத்தை நிறைவு செய்வது இதன் நோக்கமாக உள்ளது. ‘கும்ப் சஹாயக்’ சாட்போட் அனைவருக்கும் தடையற்ற, நிகழ்நேர தகவல் மற்றும் வழிகாட்டுதல் உதவியை வழங்குகிறது. பாஷினியின் மொழிபெயர்ப்பு சேவை இந்தி, ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளில் சாட்போட்டுக்கு உதவுகிறது.

பாஷினி, அல்லது இந்தியாவுக்கான பாஷா இடைமுகம் இந்தியாவின் பன்மொழிப் பயன்பாட்டுச் சூழலில்  டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சேவைகளுக்கான அணுகலை ஜனநாயகப்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாகும். தேசிய மொழிகள் மொழிபெயர்ப்பு இயக்கமாக, அதிநவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் என்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மொழி இடைவெளியைக் குறைத்து, பயனர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் உள்ளடக்கம் மற்றும் சேவைகளை அணுக பாஷினி உதவுகிறது.

இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றும் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கு பார்வையை பாஷினி உருவகப்படுத்துகிறது. மொழியியல் பன்முகத்தன்மையை பூர்த்தி செய்வதன் மூலம், இது டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது. குடிமக்கள் கல்வி, சுகாதாரம், ஆளுகை மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை அவர்கள் விரும்பும் மொழியில் அணுக உதவுகிறது.

மகா கும்பமேளா 2025-ல் பாஷினியின் செயல்பாடு மொழி வேறுபாடுகளைக் குறைப்பதில் அதன் திறனுக்கு எடுத்துக்காட்டாகும். பாஷினி தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் அது முக்கிய பங்கு வகிக்கும் என்பதை உறுதிசெய்கிறது.

About Matribhumi Samachar

Check Also

சென்னையில் தொடங்கிய “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)”

சென்னை,மார்ச் 2: இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்தொழில்முனைவோர் பங்கேற்ற “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி  (Let’s Goa 2026 …