Monday, December 08 2025 | 09:48:56 AM
Breaking News

வாட்நகரில் உலகத்தரம் வாய்ந்த தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம் – உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

Connect us on:

மத்திய கலாச்சார அமைச்சகம், குஜராத் மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து வாட்நகரில் அதிநவீன அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருள் விளக்க மையத்தை அமைத்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த முக்கியத் திட்டமானது 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரமான வாட்நகரின் துடிப்பான வரலாற்றை சிறப்புற எடுத்துரைக்கிறது. நவீன அருங்காட்சியகத்தின் சான்றான வாட்நகர் தொல்பொருள் அனுபவ அருங்காட்சியக வளாகத்தில் மூன்று முக்கிய கட்டமைப்புகள் உள்ளன.

வாட்நகரில் உள்ள தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம் இந்தியாவில் அருங்காட்சியக வளர்ச்சிக்கு ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. இது புதுமையான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் காட்சிப்படுத்துவதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சக்தியை பிரதிபலிக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், ஒட்டுமொத்த உலகமும்  இப்போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறது என்றார். இந்த அருங்காட்சியகம்  உலக வரைபடத்தில் வாட்நகருக்கு முக்கிய இடத்தைப் பெற்றுத்தரும் என்றும் அவர் கூறினார். வாட்நகர் உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகும் எனவும்,  இதன் பயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும் அவர் கூறினார்.

இந்தத் தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம் மற்றும் அகழ்வாராய்ச்சி வளாகத்தை மக்கள் கண்டிப்பாக பார்வையிட வேண்டும் என்று திரு அமித் ஷா கேட்டுக்கொண்டார். ஏனென்றால் வரலாறு, அகழ்வாராய்ச்சி ஆகியவை இவ்வளவு தனித்துவமான முறையில் இணைந்த வகையிலான வேறு எந்த அருங்காட்சியகமும் உலகில் இல்லை என்று அவர் தெரிவித்தார். சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த அருங்காட்சியகம், நாட்டின் கலாச்சாரத்தையும் உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.

யோகாவையும் ஆயுர்வேதத்தையும் பிரபலப்படுத்தியதோடு இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி புத்துயிர் அளித்துள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார். பழங்குடி சமூகங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பெண்கள் ஆகியோரின் நலனில் இந்த அரசு அதிக அக்கறை செலுத்தி வருவதாக திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

வாட்நகரின் வரலாறு எழுதப்படும்போது, பிரதமர் திரு நரேந்திர மோடி உட்பட பல சிறந்த சிந்தனையாளர்களின் பிறப்பிடமாக இது நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையே வாட்நகரின் 2,500 ஆண்டுகால பயணத்தை அருங்காட்சியக வடிவில் பாதுகாத்து உலகிற்கு வழங்க வழிவகுத்துள்ளது என்று திரு அமித் ஷா தெரிவித்தார். வாட்நகரின் வரலாற்றை உலக வரைபடத்தில் வைப்பதில் இந்த அருங்காட்சியகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.