Monday, December 08 2025 | 08:50:12 PM
Breaking News

இந்திய – ஐக்கிய அரபு அமீரிம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி 3 ஆண்டுகள் நிறைவடைகிறது

Connect us on:

இந்திய-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) கையொப்பமிடப்பட்டு 2025 பிப்ரவரி 18 ஆம் தேதி மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. சி.இ.பி.ஏ என்பது ஒரு முழுமையான மற்றும் ஆழமான ஒப்பந்தமாகும், இது 18 பிப்ரவரி 2022 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்இடையே ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் கையெழுத்தானது. இது மே 01, 2022 முதல் அமலுக்கு வந்தது.

ஒப்பந்தம் கையொப்பமிட்டதில் இருந்து, 2020-21 நிதியாண்டில் 43.3 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2023-24ல் 83.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருதரப்பு வர்த்தகம் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர், 2024), இது 71.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. 2023-24 நிதியாண்டில் எண்ணெய் அல்லாத வர்த்தகம் 57.8 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டதால், வர்த்தகத் துறையின் பல்வகைப்படுத்தலின் திறனை உணர்ந்து கொள்வதில் சி.இ.பி.ஏ வெற்றியடைந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு எண்ணெய் அல்லாத வர்த்தகத்தை USD 100 பில்லியன் அமெரிக்க டாலர்  அளவிற்கு கொண்டு செல்லும் இலக்குடன் இணங்கியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, எண்ணெய் அல்லாத ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் 27.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இது சி.இ.பி.ஏ நடைமுறைக்கு வந்ததிலிருந்து சராசரியாக 25.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. துறை அளவில், சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் பொருட்கள் மற்றும் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண தயாரிப்புகள் தவிர, மின்னணு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கொதிகலன்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் உலைகள் மற்றும் கரிம மற்றும் கரிம ரசாயனங்கள் போன்ற இலகுரக மற்றும் நடுத்தர உயர் தொழில்நுட்ப பொருட்கள் முக்கிய சாதனை  படைத்துள்ளன. தவிர, தயாரிப்பு மட்டத்தில், 2023-24 நிதியாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2.57 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள  திறன்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.