Monday, December 08 2025 | 04:36:42 AM
Breaking News

தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு:மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

Connect us on:

தமிழ்நாட்டில்  சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் திரு ஜி.செல்வம், திரு சி என் அண்ணாதுரை ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், ராமேஸ்வரம் தீவு, தஞ்சாவூர், தேவலா (நீலகிரி மாவட்டம்), மாமல்லபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

சுதேசி தரிசனம், சுதேசி தரிசனம் 2.0, பிரசாதம், மூலதன முதலீட்டுக்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஆன்மீகத் தலங்கள், பாரம்பரிய இடங்கள் போன்றவற்றில் சுற்றுலா உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இதன்படி, நிதியாண்டு 2024-25-ல் மாமல்லபுரத்தில் பாரம்பரிய பூங்காவான நந்தவன மேம்பாட்டுக்கு ரூ.99.67 கோடியும், தேவாலாவில் மலர் தோட்டத்திற்கு ரூ.70.23 கோடியும் ராமேஸ்வரம் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.20.01 கோடியும், 8 நவகிரக கோவில்கள் மேம்பாட்டுக்கு ரூ.40.94 கோடியும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் அலங்கார மின் விளக்கு அமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.11.47 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

2023-24-ம் நிதியாண்டில் மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோவில் மேம்பாட்டுக்கு ரூ.30.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம் – மண்பாடு – கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.73.13 கோடியும், காஞ்சிபுரம் மேம்பாட்டுக்கு ரூ.13.99 கோடியும், வேளாங்கண்ணி மேம்பாட்டுக்கு ரூ.4.86 கோடியும் 2016-17-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதாக திரு ஷெகாவத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.