Monday, December 08 2025 | 09:48:06 AM
Breaking News

ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14 வரை அமிர்த உத்யான் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்

Connect us on:

கோடை ஆண்டு விழாவையொட்டி, அமிர்த உத்யான் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14, 2025 வரை பொதுமக்களுக்குத் திறந்திருக்கும். அந்தக் காலகட்டத்தில், உத்யான் தோட்டப்பூங்கா காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். கடைசி நுழைவு மாலை 5:15 மணி ஆகும்.  பராமரிப்புக்காக அனைத்து திங்கட்கிழமைகளிலும் தோட்டம் மூடப்படும்.

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, ஆகஸ்ட் 29 அன்று விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள வீரர்களுக்கும், ஆசிரியர் தினத்தையொட்டி, செப்டம்பர் 5 அன்று ஆசிரியர்களும் அமிர்த உத்யானுக்கு சிறப்பு அணுகலைப் பெறுவார்கள்.

நார்த் அவென்யூ சாலைக்கு அருகில் அமைந்துள்ள கேட் எண் 35-லிருந்து பார்வையாளர்களுக்கான நுழைவு மற்றும் வெளியேறுதல் இருக்கும். அமிர்த உத்யானுக்கான நுழைவு இலவசம். பார்வையாளர்கள் visit.rashtrapatibhavan.gov.in என்ற தளத்தில்  ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வரும் பார்வையாளர்கள் கேட் எண் 35- க்கு வெளியே அமைந்துள்ள சுய சேவை நிலையங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

பார்வையாளர்கள் உத்யானுக்குள் மொபைல் போன்கள், மின்னணு சாவிகள், பர்ஸ்கள், கைப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், குழந்தை பால் பாட்டில்கள் மற்றும் குடைகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். இவற்றைத் தவிர, வேறு எந்தப் பொருட்களும் அனுமதிக்கப்படாது.

உள்ளே,  பால் வாடிகா, ஹெர்பல் கார்டன், போன்சாய் கார்டன், சென்ட்ரல் லான், லாங் கார்டன் மற்றும் சர்குலர் கார்டன் ஆகியவை உள்ளன.  சுற்று முழுவதும் வைக்கப்பட்டுள்ள QR குறியீடுகள் பார்வையாளர்கள் பல்வேறு தாவரங்கள் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களை அணுக அனுமதிக்கும்.

இந்த ஆண்டு, பார்வையாளர்கள் ஒரு புதிய அம்சத்தை அனுபவிப்பார்கள் – பாப்லிங் ப்ரூக். நிலப்பரப்பு மண்டலத்தில் பின்வருவன அடங்கும்:

● அடுக்குகள், சிற்பக் குழாய்கள், படிக்கட்டுகள் மற்றும் உயர்த்தப்பட்ட பிரதிபலிப்பு குளம் கொண்ட ஒரு வளைந்து செல்லும் நீர் ஓடை

● ரிஃப்ளெக்சாலஜி பாதைகள், பஞ்சத்வா பாதைகள் மற்றும் காடுகளால் ஈர்க்கப்பட்ட ஒலிக்காட்சிகள் கொண்ட ஒரு அமைதியான ஆலமரத் தோப்பு

● புல் மேடுகள் மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களுடன் கூடிய அமைதியான மூலிகை மற்றும் ப்ளூமேரியா தோட்டம்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.