Wednesday, December 10 2025 | 09:14:11 PM
Breaking News

சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Connect us on:

சத்தீஷ்கர் மாநில  அரசின் சார்பில் அம்பிகாபூரில் இன்று (20.11.2025) நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்களித்துள்ள பழங்குடியினர் சமுதாயம் குறித்த அத்தியாயம் இந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். பஸ்தரில் நடத்தப்பட்ட மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் அவர்களது தொன்மையான கலாச்சாரத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந:துள்ளது என்று கூறினார்.

பழங்குடியினரின் பாரம்பரியம், சத்தீஷ்கர், ஒடிசா, மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆழமாக வேரூரின்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு சத்தீஷ்கர் மாநில அரசின் சார்பில் இருவார கால பழங்குடியினர் பெருமை தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

பழங்குடியினர் சமுதாயத்தின் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்காக தேசிய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். தார்தி அபா பழங்குடியின கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் பயன்கள் நாடுமுழுவதிலும் உள்ள 5 கோடி பழங்குடியின சகோதர சகோதரிகளை சென்றடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ், குறிப்பாக பெரிதும் பாதிப்புக்குள்ளான பழங்குடியின சமுதாயக் குழுக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். இது போன்று மத்திய அரசு செயல்படுத்தி வரும் அனைத்துத் திட்டங்களும் பழங்குடியின சமுதாய மேம்பாட்டிற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளதென்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.